புதிர் எண் 12 ன் விடை - கண்டம். இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.
புதிர் எண் 13
காலில் காயம் பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடிவந்த ராகவன், பரிசல் ஓட்டும் பையனிடம் " தம்பி, அந்தக் கரையிலுள்ள மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும். வாப்பா " என்று சொல்ல
காலில் காயம் பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடிவந்த ராகவன், பரிசல் ஓட்டும் பையனிடம் " தம்பி, அந்தக் கரையிலுள்ள மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும். வாப்பா " என்று சொல்ல
ஏற்கனவே ஒரு சிறுவனை கையில் பிடித்துக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணொருத்தி " ஐயா, என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. கொண்டு போய் விடு என்று சொன்னால், அதற்க்கு இவன் நிறைய கண்டிஷன் போடுறான். என்னை அங்கு கொண்டுபோய் சேர்த்த பின் இங்கு அவன் திரும்பி வரும்போது யாராவது சவாரியோடுதான் வருவானாம். போனதும் இவனுக்கு ஆள் கிடைச்சா ஆச்சு. கிடைக்காட்டா ஒருத்தருக்கு ஆகிற சவாரிக் காசையும் ரெண்டு மடங்கு சேர்த்து நாமதான் தரணுமாம். யாராவது ஒரு குழந்தை ஏறினாக்கூட போதுமாம் . இப்போ நாம குடுக்கிறதில் நாலில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏற்ற மாட்டானாம். இங்கே இவனை விட்டால் பரிசலோட்ட வேறு யாரும் கிடையாது. நாம் போகிறதுக்கு காசு கொடுக்கலாம். இவன் திரும்பிப் போக நாம காசு குடுக்கணும்னு இவன் சொல்றது எந்த விதத்தில் நியாயம்?" என்று ராகவனிடம் தனது வருத்தத்தை சொன்னாள். சிறிது நேரம் யோசனை செய்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள், அதிகப்படியாக நாலில் ஒரு பங்கு பணத்தை மட்டும் கொடுத்து. அது எப்படி என்று சொல்ல முடியுமா ? புதிரில் clue அதிகமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment