உங்கள் முன்பாக எனது பணிவான வேண்டுகோள்.
நவ / நவீன இந்தியாவை உருவாக்க எல்லாரும் CARD SYSTEM-க்கு மாற சொன்னீங்க. சிறிய அளவிலான பலசரக்குக் கடைகளில் கூட மெஷின் வந்து விட்டது. 327 ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் 377 ரூபாய் டெபிட் பண்றாங்க.
தவறை கண்டு பிடிச்சு கேட்டதும் 50 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என்பது வேறு விஷயம்..
"ரயில் வே" என்பது நாட்டின் முதுகெலும்பு. இங்கே கார்ட் சிஸ்டம் இல்லை என்கிறார்கள். ஐயா, 5 ரூபாய் 10 ரூபாய் டிக்கெட் என்றால் பரவாயில்லை, கேஷ் கொடுத்திடலாம். 2000 ரூபாய் கொடுத்து சீஸன் டிக்கெட் எடுக்கும் இடத்தில் இந்த வசதி இல்லை என்கிறார்கள். தாம்பரம் ஸ்டேஷனில்மட்டும் இந்த வசதி இல்லையா அல்லது எங்குமே இல்லையா ?
ஒரு சிலர் வீடுகளுக்கு கோடிக்கணக்கிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்று சேர்ந்து விடுகிறது. மணிக்கணக்கில் க்யூ வரிசையில் நின்று ஒரே ஒரு இரண்டாயிரம் நோட்டைக் கையில் வாங்கி, அதை பையில் போடாமல் ரயில் வே யில் கொடுத்துவிட்டு அன்றாடம் செலவுக்கு நாங்கள் எங்கே போய் யாரைக் கேட்க முடியும்.
உங்கள் கவனத்தை ரயில் வே பக்கம் திருப்பினால், இன்னொரு 2000 ரூபாய்க்காக நாங்கள் க்யூ வரிசையில் பேங்க் முன்னால் நிற்கும் நேரம் எங்களுக்கு மிச்சமாகுமே !
கருணை காட்டுங்கள் ! காந்தியின் சிரிப்பைக் காண நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment