Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, November 12, 2016

நானொரு முட்டாளுங்க !

Image result for images of water pot
ரெண்டு நாளா ஒரே சிந்தனைதான்.இன்னிக்குப் பொழுதை ஓட்டியாச்சு. நாளைக்கு செலவுக்குப் பணம் வேணுமே. நடக்கக்கூட  முடியாமே கால்வலி பாடாய் படுத்துது. இதில் பேங்க் க்யூ விலே எப்படி நிக்க முடியும் ? பணம் வேணுமே என்று யோசிக்கும்போது எனக்குள் ஒரு மணியோசை.. 
அந்த ஓசை சொன்ன செய்தி : நீயொரு குறைகுடங்கிறது சரியாதான் இருக்குது. கையிலே ஒண்ணு ரெண்டு 500 ரூபாய் தாளை வச்சுகிட்டு இந்த அலட்டு அலட்டறே . மூட்டை மூட்டையா வச்சிருக்கிற எவனாவது இதைப் பத்தி வாயைத் திறக்கிறானா ? அவங்க நிறைகுடம். சத்தம் இல்லாமே இருப்பாங்க .நீ காலிப் பானை. அதான் ஓயாமே பினாத்திக்கிட்டே இருக்கிறே!
இதுக்கு மேலேயும் நான் 500 பத்தி  வாயைத் திறப்பேனா என்ன ? 

No comments:

Post a Comment