Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, October 25, 2016

DEAR VIEWERS,


நேற்று (24.10.2016 அன்று) நான் பதிவு செய்திருந்த சினிமா பற்றிய விஷயங்களைப் படித்த எனது நெருங்கிய தோழி என்னை போனில் தொடர்பு கொண்டு "குமுதம்  பத்திரிக்கையில் வரும் சினிமா விமரிசனம் ரொம்ப நேர்மையா இருக்கும்னு சொல்றீங்களே. அப்படின்னா மத்ததில் நேர்மை இருக்காதா ?" என்று ஒரு கொக்கி போட்டாள். இதே சந்தேகம் உங்களில் சிலருக்கு வந்திருக்கலாம்.அதனால் அவளுக்கு சொன்ன அதே பதிலை இங்கு பதிவு செய்கிறேன்.
"இப்போநான் சொல்லப்போறது  ஒரு உதாரணம்தான். ஒரு படம் வெளி வந்திடுச்சு. படத்தோட ஹீரோ இல்லாட்டா ஹீரோயின் தன்னோட ரோலை சொதப்பிட்டாங்கனு வச்சுக்கோங்க. அதற்கு இந்த இரண்டு பத்திரிக்கையின் விமரிசனமும் கீழே உள்ள மாதிரிதான் இருக்கும்.
1. விகடன்: எப்பேர்ப்பட்ட வாய்ப்பு. அதை சரியான முறையில் பயன் படுத்தி இருந்தால் திரையுலகில் இவருக்கென்று ஒரு நிரந்தர இடம் கிடைத்திருக்குமே !
2. குமுதம் : கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத்  தெரியாத ஒரு நட்சத்திரம் !
இரண்டுபேர் நோக்கமும் ஒன்று - அந்த ஸ்டாரின் திறமைக்குறைவை சுட்டிக்காட்டுவதுதான்.  ஒருத்தர் கொஞ்சம் பாலிஷா வாழைப்பழத்தில் ஊசி ஏத்தற மாதிரி ஏத்துவார். அடுத்தவர் "வெட்டு ஒண்ணு ; துண்டு ரெண்டு " என்கிற ரீதியில் சொல்லியிருப்பார்.
தமிழ் சங்கப்பாடல் ஒன்றில் ஒரு இலக்கிய நயமிக்க ஒரு சில வரிகள் : தலைவனைப் பிரிந்து, தான்படும் கஷ்டங்களை எல்லாம் தலைவனுக்கு எடுத்துரைக்க விரும்பும் தலைவி, தனக்காக தூதாக செல்பவரிடம், " என் கஷ்டத்தை, அவர் மனசு கஷ்டப்படாத வகையில் அவருக்கு எடுத்து சொல்  !" என்பாள். இது ஒருவருடைய விமரிசன பாணி.
"இதைப் பாரு.. நெத்தியிலே மட்டுமில்லே; உனக்கு உடம்பு முழுக்கக் கூட கண்ணா இருந்துட்டுப்போகட்டும். அதைப்பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லே.  நீ உன்னை எரிச்சுக்கோ. இல்லாட்டி என்னை எரி. ஆனா நீ பண்ணினது எதுவும் சரியில்லே! "  - இது இரண்டாமவர் பாணி.
எல்லாருக்கும் புரியும்படி நான் சொல்லி இருக்கிறேனா? இனிமே இந்த சப்ஜெக்ட்க்கு ஒரு புல்ஸ்டாப் வச்சிட்டு அடுத்த டாபிக்கை தீபாவளிக்கு அப்புறமா பார்க்கலாம். ஓகே ?

No comments:

Post a Comment