Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 02, 2016

Dear Viewers,

எனக்கொரு உண்மை தெரிஞ்சுது சாமி !!!!
Image result for images of  animals fight

இன்றைய நாளில் விபத்துக்களும், கொலை - குண்டு வெடிப்பில் உயிர்ப்பலிகளும் சர்வ சாதாரணமான ஒரு செய்தியாகி விட்டது. அதை யாருமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. பொதுமக்கள் ஒரு "உச்" கொட்டிவிட்டால் அதோடு அவர்கள் பொறுப்பு முடிந்து விட்டதாக அர்த்தம். அரசியல்வாதிகள் அறிக்கைகள் மூலமாக அவர்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். குற்றவாளி பிடிபட்டாலும் அவனுக்குத் தண்டனை கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. அதற்குள் நிறைய பேருக்கு என்ன கேஸ் என்பதே மறந்து விடுகிறது.
அநேக நேரங்களில் மனிதர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தைவிட ஆடுமாடுகள், பறவைகள் நாய்களுக்கு சில அமைப்புகள் கொடுக்கின்றன.
அது ஏன் என்பது புரியாமல் இருந்தது.மாட்டுக்கோ நாய்க்கோ ஏதாவது ஒண்ணுன்னா உடனே தண்டனை கிடைச்சிடுது. அது ஏன் என்ற உறுத்தல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
இந்த மாத (செப்டம்பர் 2016) மல்லிகை மகள் மாத இதழில் ஒரு தொடரில் ஒரு நாய் என்ன மாதிரியான வேலைகளைச் செய்யாது என்று பட்டியலிடப்பட்டிருந்தது. (ப்ரூப் ரீடிங்கின் போதே மனதில் பதிவு செய்து கொண்டேன்). அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. மிருகங்கள் தன்னுடைய பிழைப்புக்காக ஒன்றையொன்று அடித்துப் பிழைக்குமே தவிர, ஒன்றையொன்று கெடுத்துப் பிழைக்காது. தேங்க்ஸ் டு  அனிமல்ஸ் ! 

No comments:

Post a Comment