மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதன்தான் அறிவில் மேம்பட்டவன் என்கிறார்கள்.
மற்ற உயிரினங்கள் தாயின் வயிற்றி லிருந்து வெளியில் வந்ததுமே மோப்ப சக்தியின் மூலமே தாய் மடி (மடு) தேடி பால் குடிக்க ஓடுகின்றன. அதுவாகவே எழும்ப நடக்க ஓட கற்றுக் கொள்கின்றன.
ஆனால் மனிதப்பிறப்புக்கு மட்டுமே ஒவ்வொன்றையும் பழக்கிவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. (பிறந்த சிசு, பால் குடிக்க வைக்க சில தாய்மார்கள் போராடுவார்கள்.). தானாக கால் ஊன்றி நடக்கும் வரை தாயின் துணை மனிதனுக்கு தேவைப்படுகிறது.
அந்த விஷயத்தில் பறவைகள், மிருகங்களைவிட நாம் ஒருபடி இறங்கி தானே இருக்கிறோம். இதுக்கு உங்களோட பதில் என்ன மக்களே !
No comments:
Post a Comment