Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 10, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 22

                                 
              அச்சுப்பிச்சு அப்புமணி !
நிவேதிதாவுடன் சேர்ந்து கடற்கரையில் விளையாடிய அப்புமணி, "நாம இன்னும் உள்ளேபோய்ப்பார்க்கலாமா?" என்று கேட்டான்.
"இல்லே .. அப்பு ... நம்மள இவங்க அலவ் பண்ண  மாட்டாங்க "
"அப்படின்னா .... ?"
"நம்மள அங்கே போக விட மாட்டாங்க. நாம அஞ்சு ரதம் பார்த்தாச்சு. நிறைய சிலைகள் சிற்பங்கள் எல்லாம் பார்த்தாச்சு.கடற்கரை வரை கூட்டிட்டு வந்ததே பெரிய விஷயம். இப்பப் போய்க் கடலுக்கு உள்ளே போய்ப் பார்க்கப் போறோம்னு சொன்னா அவங்க விடவே மாட்டாங்க." என்று சொன்னாள் நிவேதிதா .
"அவங்க யாரு விடறதுக்கும், விடாததுக்கும்.  நாம போகலாம் வா " என்றான் அப்புமணி 
"நோ.  அப்பு. இப்ப நாம அவங்க கண்ட்ரோலில் இருக்கிறோம். உன்னை அவங்க அலவ் பண்ணினதே பெரிய விஷயம் ... இப்பப் போய் நாம அங்கே போறோம் இங்கே போறோம்னு சொன்னா, உடனே இவங்க அதை என்னோட தாத்தாவுக்கு இன்பார்ம் பண்ணிடுவாங்க.அப்புறம் தாத்தா என்னை எங்கேயும் போகவிட மாட்டார்." என்று விளக்கினாள் நிவேதிதா.
"ஹோட்டலில் போய் சாப்பிடலாமா?" என்று அப்புமணி கேட்டபோது, " இல்லே.. நமக்காக ஒரு இடத்தில் தனி மீல்ஸ் ரெடியா இருக்கும். அதைத்தான் சாப்பிடணும் " என்றாள் நிவேதிதா.
"அய்யய்யோ ... பெரிய இளவரசி மாதிரி நடந்து வர்றே. ஆனா  இவங்க கிட்டே கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும்னு சொல்றே .. உனக்கு போரடிக்கலே ?" என்று சந்தேகம் கேட்டான் அப்புமணி.
"நோ. அப்பு....நம்ம சேப்டிக்கை நினைச்சுதானே நம்மள இவங்க, அவங்க  கண்ட்ரோலில் வச்சிருக்காங்க "
"அட போப்பா ... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. நான் உன்னோடே சேர்ந்து சாப்பிட வரலேப்பா ...அங்கே போய் உக்காந்துட்டு அதை சாப்பிடாதே  .. இதை சாப்பிடாதே.. அப்படி சாப்பிடு ... இப்படி சாப்பிடுன்னு நீ  சொல்வே. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. நான் உலகத்தை சுத்திப் பார்க்க கிளம்பறேன் " என்றான் அப்புமணி 
"என்னடா அப்பு... நீ இவ்வளவு அசடா இருக்கிறே ?  உலகத்தை சுத்தி வர்றது அவ்வளவு லேசான விஷயமா என்ன ?"
"நான் போறேன் " என்று அப்புமணி சொல்ல, அங்கிருந்து கிளம்பி கார் நின்றிருந்த இடத்துக்கு அப்புமணியை அழைத்து சென்ற நிவேதிதா, ட்ரைவரை அழைத்து சில இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில்  ஒரு பையை சுமந்து வந்தார் டிரைவர்.
அதை அப்புமணி கையில் கொடுத்த நிவேதிதா,"இதிலே உனக்கு ப்ரூட்ஸ் பிஸ்கெட்ஸ், ஸ்நாக்ஸ் இருக்குது. பார்த்து... ஜாக்கிரதை... உலகத்தை சுத்திப் பார்க்க ரூட் தெரியலேன்னா, வீட்டுக்குக் கிளம்பிப் போயிடு" என்று  சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"சரி" என்று சொல்லி அப்புமணி கிளம்ப, அருகிலிருந்த செக்யூரிட்டி ஒருவரிடம்   பேசிவிட்டு வந்த நிவேதிதா .... "அப்பு... ஸ்டாப் .... நாங்க உன்னை சென்னையில் இறக்கி விட்டுடறோம்"என்றுசொல்ல அப்புமணி அதற்க்கு தலையசைத்து சம்மதம் தெரிவித்தான். 
அடுத்த சில மணி நேரங்களில் அப்புமணி நிவேதிதாவுடன் சேர்ந்து சென்னையை நோக்கிப் பயணித்தான். 
"அப்பு .. உன்னை எங்கே டிராப் பண்ணணும் ?" என்று நிவேதிதா கேட்க, அப்புமணி விழித்தான். அதைப் புரிந்து கொண்ட நிவேதிதா "உன்னை எங்கே இறக்கி விடணும்?" என்று கேட்டாள். 
"நீ எங்கே இறங்குவே ?"
"நான் சென்னை  ஏர்  போர்ட் போய் அங்கேருந்து டில்லி போயிடுவேன்."
"அப்படின்னா நீ இறங்கி உள்ளே போயிடு.. நான் வெளியே போயிடறேன் "என்று அப்புமணி சொல்ல, ஏர் போர்ட் வாசலில் காரை நிறுத்த சொன்ன நிவேதிதா "அப்புமணி.. இறங்கி ஜாக்கிரதையா போ. ரொம்ப சுத்தாமே வீட்டுக்குப் போயிடு. அம்மா தேடுவாங்கதானே? என்று சொல்லிக்  கை யசைத்து விடை கொடுக்க, " டாட்டா " என்று கைகளை அசைத்து விடை கொடுத்தான் அப்புமணி. அவனை இறக்கி விட்ட பின் நிவேதிதாவின் கார் சென்னை ஏர்  போர்ட்டுக்குள்  பறந்தது.
சென்னையில் சேகரின் அறைக்கு வந்த ராஜு , " நம்ம தொழிலுக்கு சின்னப் பசங்க யாராவது தேறுவாங்களானு பார்க்கணும்  " என்றான்.
"ஏன் ?"
"போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குது. சின்னப் பசங்கன்னா ரொம்ப சந்தேகம் வராது " என்று சொன்னான் ராஜு 
"சரி . நம்ம சகா கிட்டே சொல்லி வைக்கிறேன் " என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ராஜுவின் மொபைல் ஒலித்தது.
எடுத்துப் பேசிய ராஜு  "சேகர் ஒரு அவசர வேலை ... நான் மீனம்பாக்கம் வரை போயிட்டு வந்திடறேன். வந்து விவரம் சொல்றேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி மீனம்பாக்கம் வந்து ரமேஷின் வருகைக்காகக் காத்திருந்தான் .
அப்போது கையில் பையுடன் அங்குமிங்குமாக திரிந்து கொண்டிருந்த அப்புமணி அவன் கண்களில் பட்டான் 
'டேய் ... தம்பி இங்கே வாடா " என்று அதட்டலான குரலில் அழைக்க அவனருகில் வந்த அப்புமணி, " நான் தம்பி இல்லே. எங்க வீட்டில் நான் மட்டுந்தான். என் பேரு அச்சுப்பிச்சு அப்புமணி " என்றான்.
"இங்கேயும் அங்கேயுமா திரியறே. யார் நீ ? எங்கே வந்தே? அட்ரஸ் எதையாது தொலைச்சிட்டு தேடித் திரியறயா ?"
"இல்லே "
"உங்க வீடு எங்கே இருக்குது ?"
"ஊர்லே இருக்குது "
"இங்கே என்ன பண்றே?யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ?"
"நான் உருப்படாத ராஜகுமாரன் மாதிரி உலகத்தை சுத்திப் பார்க்க வந்திருக்கிறேன்  "
இதைக் கேட்டு அதிர்ந்துபோன ராஜு,"தம்பி, வேலை குடுத்தா செய்வியா ?" என்று கேட்டான்.
"திருடக் கூடாது.. பிச்சை எடுக்கக் கூடாதுன்னு தான் எங்க அம்மா சொல்லி இருக்காங்க. வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லலே ? எந்த ஆபீசில் வேலை  ?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டான் அப்புமணி .
"கலெக்டர் ஆபீசில் ...கலெக்டர் வேலை.... செய்வியா ?"
"சொல்லிக் குடுத்தா செய்வேன். ஆனா...கோட்டுசூட்டு..டை .. இதெல்லாம் வேணுமே "
"போற வழிலே வாங்கிக்கலாம் " என்று சொல்லிய ராஜு, ரமேஷைத் தேடிப் பார்த்தான். அவன் கண்ணில் தட்டுப்படாததால் அப்புமணியை அழைத்துக் கொண்டு சேகரைப் பார்க்கக் கிளம்பினான். 
---------------------------------- தொடரும் -------------------------------------------------------------------------------- 

No comments:

Post a Comment