Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 21, 2015

சிரியுங்க சிரியுங்க சிரிச்சு கிட்டே இருங்க .


மேலே உள்ளது facebook ல் நான் படித்த ஒரு விஷயம். இனி நீங்கள் படிக்கப் போவது எனது கருத்து.
அட, என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டீங்க ? 2013 ஏப்ரலுக்கு முன்புவரை சீரியல் பார்ப்பவர்களை கிண்டலடித்துக் கொண்டிருந்த ஆள் நான். உலகத்திலேயே மிக மோசமாக வீணடிக்கப் படுகிற நேரம் டீவீ சீரியல் பார்க்கிற நேரந்தான் என்று அட்வைஸ் பண்ணுவேன். ரிடயர் ஆன பிறகு (இப்போது) மாலை 7 மணிக்கு மேல் என்னுடைய பொழுது போக்கு சீரியல் பார்ப்பதுதான். பகலில் எந்த சீரியலும் பார்க்க மாட்டோம். ( பகல் வேளையில் ஜெயா மாக்ஸ் அல்லது முரசு சேனல் மட்டுந்தான் ஓடிக் கொண்டிருக்கும். அல்லது நியூஸ் பார்ப்போம்). யாரும் விரும்பி சீரியல் பார்ப்பதில்லை. அநேக வீடுகளில்  காலையில் வீட்டை விட்டுக்கிளம்பிய குழந்தைகளும் வேலை பார்ப்பவர்களும் வீடு வந்து சேர இரவு ஆகி விடுகிறது. வீட்டுக்கு வந்ததும் அவரவர் வேலையை முடித்து விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள்.பொழுது போகாமல் தூக்கம் வராமல் தவிக்கும் ஜென்மங்கள்தான் டீவீ சீரியல் பார்க்கிறார்கள் . ஒரு மனுஷன் கெட்டுப் போக என்னென்ன வழி உண்டோ அது அத்தனையும் நம்ம வீட்டுக்குள்ளே வந்து நமக்குப் பாடம் சொல்லித் தருகிறது சீரியல். பிறகு அதை ஏன் பார்க்கணும்னு கேட்கிறீங்களா? சும்மா கையைக்கட்டிக் கொண்டு மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், நம்ம மனசு டீவீ சீரியலை விட கிரிமினல் தனமாக யோசிக்கிறது. இன்னொன்னு சொல்வேன். எல்லாருக்கும் கோபம் வரும். இருந்தாலும் சொல்றேன். சேனல்களில் ஒளிபரப்பப்படும் ரியல் காமெடி ஷோ சீரியல்தான். அதனால்தான் அதை நான் பார்க்கிறேன். சிரியுங்க சிரியுங்க சிரிச்சு கிட்டே இருங்க . நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

No comments:

Post a Comment