Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 19, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 128 )

                                          நாடு ரொம்ப கெட்டுப் போச்சு !!

தாயே ஈஸ்வரி. பராசக்தி, உன்னோட சோதனைக்கும் ஒரு அளவே இல்லையா ? தவமா தவமிருந்து கோயில் குளத்தையும் அரசமரத்தையும் சுத்தி சுத்தி வந்து ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒண்ணைப் பெத்து எடுத்தேன் . பிறந்து அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் தெரிஞ்சுது அது முட்டாளிலும் சேர்க்க முடியாத புத்திசாலிகள் வரிசையிலும் சேர்க்க முடியாத ரெண்டுங் கெட்டான்னு. இருந்தாலும் மலடிங்கிற ஏச்சு பேச்சிலிருந்து என்னைக் காப்பாத்திக் கொண்டாந்துசேன்னு பொத்திப் பொத்தி வளர்த்தேன் . அதை நார்மல் குழந்தையா மாத்தியே தீருவேன் என்கிற வைராக்கியத்தில் தானே நான் பார்த்துட்டுருந்த வேலையை ரிசைன் பண்ணினேன்.
ராவும் பகலும் நான் பட்ட அவஸ்தை கொஞ்சமா நஞ்சமா ? இல்லாட்டா இதெல்லாம் நீ அறியாததா ? எவ்வளவு நம்பிக்கையா இருந்தேன், என்னோட விடாமுயற்சியில் பிடிவாதத்தில் வைராக்கியத்தில் நான் ஜெயிச்சுட்டேனு நினைச்சு ! இப்போ அத்தனையும் வீணாப் போயிடும் போலிருக்கே. எனக்கு ஏன் இந்த சோதனை ? நீயும் பெண்ணாச்சே ! தாய் மனம் அந்தக் கருணை மனம் உனக்கும் இருக்கும்தானே  ? பிறகு ஏன் என்னை இப்படி சோதிக்கிறே ? சாண்  ஏறினால்  முழம் சறுக்குகிற நிலை ஆயிடுச்சே. இவன் என்ன காரணத்துக்காக இப்படி இருக்கிறான்னு தெரியலையே. பிறப்பிலேயே இவன் நார்மல் சைல்ட் இல்லேன்னு தெரிஞ்சும் என்னோட விடாமுயற்சியில் தானே இந்த அளவுக்கு அவனை கொண்டு வந்தேன். 
வாசுவோடு  படிக்கிற பிள்ளைகளுக்குப் போன் பண்ணி விசாரிச்சாச்சு. சொல்லி வச்ச மாதிரி அத்தனை பேரும் ' ஆன்ட்டி அவன் நடவடிக்கை எங்களுக்குக் குழப்பமா இருக்குது. எங்களில் யாரைப் பார்த்தாலும் அவங்கவங்க பேரை சொல்லி "நீ, நீதானே? வேறு யாருமில்லியே'ன்னு கேட்கிறான். கிளாஸ்க்கு வந்த மேம் கிட்டே "நீங்க மேம் தானே ? மத்த யாரும் இல்லியே"ன்னு கேட்கிறான். இப்படியே போனால் அது வேறே மாதிரி பிரச்சினை ஆயிடும். எதுக்கும் அவனை 'சரி' பண்ணப் பாருங்க . அவனோட க்ளோஸ் பிரெண்ட்ஸ்ங்க கூட அவன் பக்கத்தில் போகவே பயப் படறோம்"ன்னு சொல்றாங்க .  நான் இதை எப்படி சால்வ் பண்ணப் போறேன். வீட்டை விட்டால் காலேஜ். காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்தால் டீவீ இல்லாட்டா கம்ப்யூட்டர்னு இருக்கிறவனாச்சே.ஏன் இப்படி மாறினா ன்னு தெரியலியே ! 
ஒரு மனுஷனுக்கு சோதனைக் காலம் வரும்போது எல்லாவிதத்திலும் கஷ்டம் கை கோர்த்துகிட்டு வரும்னு சொல்வாங்க. அது சரியாத்தான் இருக்குது. அவர் வீட்டில் இல்லை. வேலை மாற்றலாகி குஜராத் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அங்கே போய் குறைஞ்சது ஆறு மாசம் செர்விஸ் பண்ணின பிறகுதான் லீவுன்னு வாயைத் திறக்க முடியும் . அதனால் வீட்டில் என்ன பிரச்சினைனாலும் நீயே சமாளிக்க்சுக்கோ. முடியலன்னா கிளம்பி அங்கே வந்திடுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு . பாஷை தெரியாத ஊரில் முன்னே பின்னே ஆட்கள் பழக்கமில்லாத இடத்தில் இவனை இந்த நிலையில் வச்சுகிட்டு  அங்கே போய் நான் என்ன பண்ண முடியும். இவன் குழந்தையா இருந்தப்பவும், அப்பப்போ பிரச்சினைன்னு போகும்போதும் எனக்கு ஆறுதலா இருந்து இவனுக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டரும் இப்போ ஊரில் இல்லை. மகன் பேரக்குழந்தைகளைப் பார்க்கிறதுக்காக வெளிநாடுபோயிட்டாராம்.இவனுக்கு என்ன பிரச்சனை ன்னு தெரியலையே. தாயே ... பராசக்தி ஒரு நல்ல வழியைக் காட்டு.
"அம்மா " என்று கூப்பிடும் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள் கல்யாணி 
"கீரை நல்லா இருக்கு ..எப்படிப் பச்சைப் பசேல்னு இருக்கு பார்த்தியா . கீரைன்னா நீ ஆசையா வாங்குவியே. அதான் கதவைத் தட்டி உன்னைக் கூப்பிட்டேன்.  நீ கோச்சுக்காதே "
"இப்போ எதுவும் வேண்டாம் .. பையனுக்கு உடம்பு சரியில்லே .."
"முடியாட்டா டாக்டரண்டே போறதுதானே "
"போலாம் ... ஆனால் அவர் ஊரில் இல்லே "
"அட என்னம்மா நீ .. ஊர் உலகத்தில் அவர் ஒருத்தர் தான் டாக்டரா என்ன ? அந்த ஒரு ஆளு இல்லாட்டா குடியே முழுகிப் போயிடுமா என்ன ? கண்டதையும் நினைச்சு யோசனை பண்ணாமே யாராவது ஒரு டாக்டரை பார்த்து பிள்ளையைக் காட்டு தாயீ. நான் வியாபாரத்தைப் பார்க்கக் கிளம்புதேன் " என்று சொல்லிவிட்டு கூடையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தாள் கீரைக் காரி.
சிறிது நேரம் யோசனையில் இருந்த கல்யாணி, "தெய்வம் காட்டும் ; ஊட்டாது"ன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே . என் பிரார்த்தனையைக் கேட்டுட்டு என் பரிதவிப்பைப் பார்த்துட்டு  என்னோட தாய் பராசக்தி தான் கீரைக்காரியா வந்து இப்படி ஒரு யோசனையை சொல்லிட்டுப் போனாளா ? இந்த சின்ன விஷயம் கூட மூளைக்கு எட்டாமே நானே ஒரு பைத்தியக்காரி மாதிரி அழுது புலம்பிட்டு இருந்தேனே என்று தன்னைத் தானே கடிந்து கொண்ட கல்யாணி, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இணையத்தில் இணைந்தாள். தேவையான விஷயங்களை குறித்துக் கொண்டு போனில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டாள். 24 மணி நேரமும் பிஸியா இருக்கிற டாக்டர்ஸ்  அப்பாயிண்ட்மெண்ட் இருந்தால் தான் பார்ப்பேன்னு சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்குது. எந்த நேரமும் கிளினிக்கில் ஈ விரட்டிட்டு இருக்கிறவங்களும் இந்த டயலாக்கை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் போய்ப் பார்க்கப் போகிற மகராஜன் எந்த ரகமோ தெரியலை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி "வாசு .. என்ன ஏதுன்னு கேட்காமல் உடனே கிளம்பு . நாம இப்போ ஒரு இடத்துக்குப் போறோம் " என்றாள் 
"எங்கேம்மா ? ஆஸ்பிட்டல்க்கா ?"
"எப்படித் தெரிஞ்சுட்டே கண்ணா ?"
"உன்னோட ஆக்டிவிடீஸ் வச்சுதான் .. நீ ஒரு வாரமாவே நார்மலா இல்லே . என்ன ப்ராப்ளம் மம்மீ ?"
இவ்வளவு தெளிவா இருக்கிறானே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி, "கேள்வி கேட்காமே கிளம்பு " என்று கடுகடுத்த தொனியில் சொல்ல அவளோடு கிளம்பினான் வாசு  
கிளினிக் உள்ளே நுழைந்ததுமே, "என்னோட டர்ன் வந்ததும் முதலில் நான் உள்ளே போய்  டாக்டரிடம் பேசிட்டு வந்துடறேன். அப்புறமா பையனை உள்ளே அனுப்புங்கோ.நான் உள்ளே இருக்கிறப்போ அவனைக் கொஞ்சம் கேர் எடுத்துப் பார்த்துக்கணும்" என்று கல்யாணி சொல்ல தலையை ஆட்டினாள் நர்ஸ் 
சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து "மேம் நீங்க போங்க " என்று சொல்ல, அவளுக்கு கண்களால் சமிக்ஞை கொடுத்து விட்டு டாக்டரைப் பார்க்கக் கிளம்பினாள் கல்யாணி. அவர் தோற்றத்தை வைத்தே 'நல்ல மனுஷனா தெரியறார்; அனுபவசாலி மாதிரியும் தெரியறார்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"பேஷண்ட் ..."
"என்னோட பையன் .. வெளியில் இருக்கிறான். இந்த பைல் அவனோட ட்ரீட்மென்ட் ஹிஸ்டரி.. வழக்கமா பார்க்கிற டாக்டர் இப்போ பாரின் போயிட்டார் " என்று கல்யாணி சொல்லிக் கொண்டிருக்க, பைலைப் புரட்டி அதிலிருந்து குறிப்புகளில் ஆழ்ந்தார் டாக்டர் 
"என் பிள்ளை எதையும் அபரிமிதமாக கற்பனை பண்ணிப் பார்ப்பான். ஒரு படத்தில் நாகேஷ் அப்படி ஒரு ரோல் பண்ணியிருப்பார். கல்யாண மேடையில் குத்து விளக்கு எரிவதைப் பார்த்துட்டு அந்த விளக்கிலுள்ள நெருப்புப் பொறி கல்யாணப் பெண் புடவையில் பற்றி அவள் எரிந்து போவது போல கற்பனை பண்ணிக்கிட்டு அழுவார். இவன் அதே ரகம்"
"புரியுது .. ரீசென்ட் ஆக என்ன நடந்தது ?"
"என்னைப் பார்த்து நீ நிஜமாவே மம்மி தானே ? வேறே யாருமில்லையே ன்னு  கேட்கிறான். அவனை சுற்றி இருக்கிற எல்லாரையும் பார்த்து இதே கேள்வியைத் தான் கேட்கிறான். எனக்கு எதுவுமே புரியலே. மற்றபடி நார்மலா இருக்கிறான் "
"பழக்கமில்லாத இடம் எங்காவது போயிட்டு வந்தானா? அறிமுகமில்லா  மனுஷங்க யாராவது ..."
"இல்லே ..  அவன் எப்பவும் வீடு காலேஜ்னு இருப்பான் . பிரெண்ட்ஸ்ங்க கூட எங்க வீட்டுக்கு வருவாங்களே தவிர இவன் எங்கேயும் போக மாட்டான். இவன் நார்மல் சைல்ட் இல்லேன்னு தெரிஞ்சு இவன் குழந்தையா இருக்கிறப்போ இவன் அங்கே இங்கேன்னு எங்கேயும்   போகாதபடிக்கு நாங்க  கண்ட்ரோலா வச்சிருந்தோம். பிறகு அதுவே இவனுக்குப் பழக்கமாயிட்டதாலே இவன் எங்கேயும் போறது கிடையாது யாரைப் பார்த்தாலும் சந்தேகப் படறான் .. அது ஏன்னு தெரியலே "
இண்டர்காமில் நர்சை அழைத்த டாக்டர் "இந்த அம்மாவோட பையனை உள்ளே அனுப்புங்க  " என்று சொல்ல, வாசுவை அழைத்து வந்து டாக்டர் அருகில் உட்கார வைத்து விட்டுப் போனாள் நர்ஸ் .
"ஹலோ வாசு ... குட் மார்னிங். எப்படி பீல் பண்றீங்க ?"
"நீங்க நிஜமாகவே டாக்டரா ?"
"ஆமாம் ?"
"மம்மி ... இவர் டாக்டரா ? உனக்கு கன்பார்ம்டா தெரியுமா ?"
"தெரியும் .. இது அவர் கிளினிக் .. அதோ நர்ஸ் .. எவ்வளவு பேர் வெயிட் பண்றாங்க பாரு "
"அப்படி நம்பி ஏமாந்துடாதே "
இதைக் கேட்டு அதிர்ந்த டாக்டர் "என் மேலே உனக்கு ஏன் இப்படியொரு சந்தேகம்  ?" என்றார் 
"யாரையும் நம்ப முடியறதில்லே .. நாம ஒரு இடத்துக்குப் போறோம். பழகறோம். நம்மளைப்  போல மனுஷங்கன்னு நினைச்சுதான் பேசறோம் பழகறோம். அப்புறம் திடீர்னு ஒருநாள் அவங்களை தீவிரவாதின்னு சொல்லி முத்திரை குத்தி அவங்களோட பேசினவங்க பழகினவங்க யார் யார்னு  லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுதாங்க. உளவுத் துறைக்கே சில விஷயங்கள் லேட்டாத் தான் தெரியுது. அப்படியிருக்க நம்மளப் போல சாதாரண மனுஷங்களுக்கு யார் யார் எப்படின்னு  எப்படித் தெரியும்? இவங்க அம்மான்னு சொல்றாங்க. ஏதோ ஒரு ப்ளானில் கூட இவங்க அம்மான்னு சொல்லி எங்க வீட்டில் வந்து இருக்கலாந்தானே ? நீங்க நிஜமாவே டாக்டரா ? உங்களை நான் எப்படி நம்பறது ? உங்க கிளினிக்கில் சீசீ டீவீ இருந்து அதில் நாங்க இங்கே வந்தது பதிவாகி யிருந்தால் ஏதோ ஒரு காலத்தில்  அது எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைதானே" என்று வாசு சொல்லிக் கொண்டிருக்க தலையில் "மடேல் மடேல்" என்று அடித்துக் கொண்டிருந்தாள்  கல்யாணி.
"உங்க பையனுக்கு டீவீ பார்க்கிற பழக்கம் உண்டா ?"
"அதைத் தவிர வேறு பொழுது போக்கு அவனுக்கு கிடையாது . எப்பவும் கார்ட்டன் படங்களைப் பார்ப்பான் . அதில் வர்ற கேரக்டர்ஸ் மாதிரி குரல் குடுப்பான் . ஆக்ட் பண்ணுவான் . இப்போ கொஞ்ச நாளா .. கொஞ்ச நாளாத்தான் அவன் நியூஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்கிறான். அவன் வீட்டில் இருக்கிறப்போ ஒரு பாட்டு கேட்கவோ ஒரு சீரியல் பார்க்கவோ முடியாது "
"சமீபத்தில் அவன் பார்த்த கேட்ட செய்திகள் அவனைக் கொஞ்சம் குழப்பி இருக்கு. அவ்வளவுதான் . கவலைப் படாதீங்க . சரி பண்ணிடலாம் " என்று டாக்டர் சொல்ல, "தாயே பராசக்தி இந்த அளவுக்காவது கருணை காட்டினியே ..உனக்கு நெய் விளக்கு போடறேன் " என்று மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி  

No comments:

Post a Comment