Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, March 20, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 092 )

 " ஊ ... லலல்லா ..ஊ ஊ ஹூ  லலல்லா ! "
ஹாலிலிருந்து ஒரே கூச்சலும் சிரிப்புச் சத்தமும் வர, அறையை விட்டு வெளியில் வந்து ஹாலை எட்டிப் பார்த்தான் குமார். டீவியில் ஏதோ ஒரு சினிமா படக்காட்சி  ஓடிக் கொண்டிருந்தது. ஆடு ஒன்று ஒரு மனிதனைத் துரத்த, அவன் பயந்து ஓடுவதைக் கண்டு குழந்தைகள் ரசித்து சிரித்துக் கொண்டிருக்க குழந்தைகளோடு குழந்தையாய் மைதிலியும் கைதட்டி சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு கேலியும் கிண்ட லு ம் நிறைந்த குரலில் " ஏய், என்னடி இது ? " என்றான்.
" அதோ பாருங்க, அந்த ஆடு அவனை என்னமாய் துரத்துது " என்றாள் மைதிலி கண்களை டீவியை விட்டு வேறு பக்கம் திருப்பாமல். 
" பயந்து ஓடுகிறவனைப் பார்க்கிறதில் அப்படியென்ன சந்தோசம் ? "
" இவ்வளவு நேரம் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணிக் கொண்டி ருந்தான் தெரியுமா ? கடைசியில் இந்த ஆடு இவனை ஒரு கை பார்க்கிறது பாருங்க "
" சரிடீ . இதில் நீ குதிச்சு கும்மாளம் போட என்ன இருக்கிறது ? "
" இப்போ ஒரு அயோக்கியன் இருக்கிறான்னு வச்சுக்குவோம். அவன் பண்ற அட்டகாசம் யாராலேயும் தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் அவனை நம்மாலே எதுவும் செய்ய முடியாமே கையாலாகாத நிலைமை யில் நாம் இருப்போம். அதே ரௌடியை வேறொருத்தன் வந்து போட்டுத் தள்ளினால் "அப்பாடா"ன்னு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவோமே அது மாதிரிதான் இதுவும்.  ஆமா ... நீங்க இன்னும் ரெடியாகலியா ? "
" இதோ ரெடி. நான் கிளம்பறேன். அநேகமா நாளைக்கு ஈவெனிங்க் கிளம்பி வந்துடுவேன்னு நினைக்கிறேன். இங்கிருந்து போறப்போதான் ஆளுக்கொரு திக்கிலிருந்து தனித்தனியா கிளம்பிப் போறோம். அங்கிருந்து திரும்பி வர, ஏற்கனவே வேன் அரெஞ்ச் பண்ணியாச்சு. கதவை நல்லா லாக் பண்ணிக்கோ. நான் கிளம்பறேன் "
" சரி. பார்த்துப் போங்க " என்ற மைதிலி திரும்பவும் டீவியில் மூழ்கிப் போனாள்.
ஸ்டேசன் பிளாட்பார்மில் காலடி எடுத்து வைத்த போது செல்போன் சிணுங்கியது. அதை எடுத்துக் காதில் பொருத்திக் கொண்டு பேசியபடி நடக்க ஆரம்பித்த குமார் கால் இடறி பிளாட்பார்மில் நின்று கொண்டிருந் தவர்மீது மோதி பாலன்ஸ் செய்து நின்றான். அந்த நபர் முறைப்பதைப் பார்த்துவிட்டு  " ஸாரி ..  கால் இடறி விட்டது ஸாரி " என்றான்.
"பாதையில் கவனம் இருந்தால் எப்படி ஸார் கால் இடறும். ஒண்ணு நடந்து போய்க்கிட்டே இருங்க , இல்லாட்டா ஒரு ஓரமா நின்று போன் பண்ணுங்க. இரண்டையும் ஒரே சமயத்தில் செய்தால் இப்படித்தான்  " என்றது  முறைப்புப் பார்ட்டி .
"உங்க கைடன்ஸ்க்கு தேங்க்ஸ். இனிமே அப்படி நடக்காமே பார்த்துக் கிறேன்  " என்று குமார் பணிவாக சொன்னதும் ஒரு வித வெட்கத்துடன் தலையாட்டினர் முறைப்பு .
தன்னை இடற வைத்தது எது என்ற ஆராய்ச்சியில் இறங்கினான். ஒரு லாரி லோட் சாமான்களை பிளாட்பார்ம் முழுக்க இறைத்துப் போட்டபடி போர்டருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயதுப் பெண் மேலோட்டமாகப் பார்க்கும் போது அவர் வட மாநிலத்தவர் போலத் தெரிந்தார். ஆனால் தமிழில் நன்றாக வார்த்தையாடிக் கொண்டிருந்தார் வயதான போர்டர் ஒருவர் கூலி அதிகம் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந் தார். அதைக் காதிலேயே வாங்காத மாதிரி அந்தப் பெண் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைச்சுற்றி ஐந்து பேர். யாருமே போர்டரின் கெஞ்சலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை தன்னைக் குமார் கவனிப்பதைக் கண்ட போர்டர் "ஸார் இது நியாயமான் னு நீங்களே சொல்லுங்க ஸார். மெயின் ரோட்டிலிருந்து இவ்வளவு லக்கேஜ் எடுத்து வந்திருக்கிறேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் 50 ரூபா கூலி தர்றாங்க ஸார் " என்றான் பரிதாபமாக.
" ஏம்ப்பா நீங்க ரேட் பேசிட்டுதானே சுமையை தலையில் தூக்குவீங்க " என்றான் குமார் 
" இல்லே ஸார், காலையிலிருந்து எதுவுமே படியலே. வந்த கிராக்கியை விட்டுடக் கூடாதேன்னு எதுவும் பேசாமே தூக்கிட்டேன். இந்த ஸ்டேசனில் 300 ரூபாய்க்குக் குறைந்து இதை யாரும் தொடக் கூட மாட்டாங்க. அநியாயமா 50 ரூபா கொடுத்து ஏழைங்க வயித்தில் அடிக்கிறாங்க ஸார் "
" இதோ பார் 50 ரூபா வேண்டாட்டா அதை இப்படிக் கொடுத்திட்டு போய்க்கிட்டே இரு . அவன் என்ன ஹை கோர்ட் ஜட்ஜா ? பெரிசா நியாயம் கேட்கப் போயிட்டே ? " என்று இரைந்தாள் அந்தப் பெண் 
" இல்லே மேடம் ..." என்ற குமாரிடம் " ஸார், உங்க ஜட்ஜ் மெண்டைக் கேட்க எங்களுக்குப் பொறுமையில்லே. நேரமும் இல்லே " என்றாள் அந்தப் பெண் 
" விடுங்க ஸார். எனக்காக நீங்க ஏன் அதுகிட்டே பேச்சு வாங்கறீங்க ? " என்ற போர்டர் அந்தப் பெண்ணிடம், " இந்தாம்மா. இதையும் நீயே வச்சுக்கோ. என்னோட உடன்பிறப்புக்கு தூக்கிட்டு வந்ததா நான் நினைச் சுக்கிறேன்" என்று சொல்லி அவள் முன்பாக நோட்டை நீட்ட, கொஞ்ச மும் தயங்காமல் அந்தப் பெண்  அதை வாங்கி தனது கைப் பைக்குள் போட்டுக் கொண்டதைக் கண்ட குமார் அசந்து போனான்.
"என்ன மனுஷ ஜென்மம் இது ? இதை அப்படியே நாலு சாத்து சாத்தணும் "  என்று கைகள் துறுதுறுத்தது.
ட்ரைன் வர நேரமிருந்ததால் காப்பி குடிக்கப் போவது போல மெதுவாக நடந்து வந்து அந்த போர்டரைத் தேடினான். தூண் ஒன்றில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த போர்டரைக் கண்டதும், " எனக்கே மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா. அந்த 50 ரூபாயையும் நீ வேண்டாம்னுட்டு வந்து ட்டியே" என்றான்.
"விடுங்க ஸார் ஏழைங்க, கூலிக்காரங்க வயித்தில் அடிச்சு சேர்க்கிற காசு உருப்படும்னா நினைக்கிறீங்க. உழைச்சு சாப்பிடறதே உடம்பில் ஓட்ட மாட்டேங்குது. ஏமாத்தி சேர்க்கிற பணம் ஏதாவதொரு வழியில் போயிடும் " என்று ஞானி போல தத்துவம் பேசினான். ட்ரைன் வரும் அறிவிப்பைக் கேட்டதும் " வர்றேன்ப்பா " என்று விடைபெற்றான் குமார்.
இதற்குள் பிளாட்பார்மில் ட்ரைன் நுழைய, எல்லோருமே ஏறுவதில் பிசி யானார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் இருந்த கம்பார்ட்மெண்டில் தான்  குமாருக்கும் சீட் அலாட் ஆகியிருந்தது. தலைவிதியே என்று நினைத்தபடி  அப்பர் பெர்த்தில்   ஏறி படுத்துக் கொண்டான். எப்போது தூங்க ஆரம்பித்தான் என்பது அவனுக்கே நினைவில் இல்லை.
திடீரென்னு " சோர் .. சோர் " என்ற அலறல், ஒட்டு மொத்தக் கம்பார்ட் மெண்ட்டையும் எழுந்து உட்கார வைத்தது. கீழே குதித்த குமார் விளக்கைப் போட்டான். கத்தியது அந்த வடமாநிலப் பெண்தான். அவளது படபடப்பைக் குறைக்க பாட்டிலைத் தேடி எடுத்து தண்ணீரைக் கொடுத்து கொண்டிருந்தார் அவளது கணவன். 
" என்ன ? " என்று கேட்ட சக பயணிகளிடம், " விழுப்புரத்தில் ட்ரைன் நின்றதும் காப்பி கிடைக்குமான்னு பார்க்க விண்டோ கதவைத் திறந்தேன். கொஞ்சம் தள்ளி ஒரு டீ வாலா போனான். கூப்பிடறதுக்கு டோர் பக்கம் வந்தேன். அப்போ சிக்னல் விழுந்து ட்ரைன் மூவாக ஆரம்பிச்சுது. அந்த சமயம் ஒருத்தன் ஓடி வந்தான். ஏற வர்றான்னு நினைச்சு நான் அங்கே நின்று அதைப் பார்த்திட்டுருந்தேன். ஆனால் அவன் சடனா என் கையில் கிடந்த நாலு வளையலையும் பறிச்சிட்டு ஓடிட்டான் " என்று விளக்கினாள் அந்தப் பெண் 
கூட்டம் " உத்சூ " கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது 
" ஒவ்வொரு வளையலும் இரண்டரைப் பவுன். மொத்தம் பத்து பவுன் போச்சு " என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, " ட்ரைன்னை நிறுத்தி கம்ப்ளைன்ட் கொடுங்க " என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் 
இந்த களோபரம் எதிலும் குமாரின் மனம் ஒட்டவில்லை. போர்டரின் முகம் நினைவில் வந்து போனது. வீட்டை விட்டுக் கிளம்பும் முன், மைதிலி " இவ்வளவு நேரம் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தான் தெரியுமா ? கடைசியில் இந்த ஆடு இவனை ஒரு கை பார்க்கிறது பாருங்க " என்று சொன்ன வார்த்தைகள், சொல்லி கைதட்டி சிரித்த காட்சி நினைவில் வந்தது. குமார் தன்  மனதுக்குள்  கைதட்டி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். ச்சே. ஒருவருடைய கஷ்டத்தைக் கண்டு ஆனந்தப் படுவது எந்த விதத்தில் நியாயம் என்று மனச்சாட்சி தட்டிக்  கேட்டது. அடாவடியாக ஒரு கூலிக்காரன் வயிற்றில் அடிப்பது நியாயம் என்றால், அந்த அடாவடிப் பேர்வழிகளின் அவஸ்தை யைக் கண்டு சிரிப்பதும் நியாயமே என்று சொல்லி மனச்சாட்சியைத் தட்டித் தூங்க வைத்து விட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்  குமார்.  


No comments:

Post a Comment