Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 26, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 80 )

    இவர்கள் மாறுபட்டவர்கள் / வேறுபட்டவர்கள் !

" ஹேமா, நம்ம வசந்தி வந்திருக்கிறா. மெயின் கேட் பக்கம் நிற்க்கிறா. கூடவே அவளோட கெஸ்ட்ம் வந்திருக்கிறாங்களாம். அவங்களைப் பார்க்க நம்மள கீழே வரச் சொல்றா. வாடீ, அந்தக் குட்டீஸைப் பார்த்துட்டு வந்துடலாம் " என்று பரபரத்தாள் பிரியா 
" மேலே வர சொல்றதுதானே "
" அவ கீழே வரச்சொல்றா. நீ வர்றியா , இல்லே நான் போகட்டுமா ? "
" இல்லேடி, இந்த ஸ்டேட் மெண்ட் இப்பவே பிரிண்ட் எடுத்தாகணும். அதான் யோசிக்கிறேன். ஒரு ரெண்டு நிமிஷம்  .. சரி.. வா ஓடிப் போயிட்டு வந்துடலாம் " என்றாள் ஹேமா 
இருவரும் மெயின் கேட் அருகில் வந்தார்கள். வசந்தியுடன், கிட்டத் தட்ட பத்து வயதில் இரண்டு சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள் 
" ஹாய் வசந்த், ஒரு வாரமா ஒரே கொண்டாட்டம், கும்மாளம்  தானா ? " என்றாள் பிரியா 
"ஆமாண்டி,இந்த  ஒரு வாரமா மகாபலிபுரம், வண்டலூர்,மெரினா அது இதுன்னு ஒரே ரௌண்ட்ஸ்தான். பீட்ஸா,சாட் ஐட்டெம், பைவ் ஸ்டார் ஹோட்டல் மீல்ஸ் என்று திணற அடிச்சிட்டேன் " என்றாள் வசந்தி 
"ஹாய் குட்டீஸ்" என்று சிறுமிகளின் கன்னத்தைக் கிள்ளிய ஹேமா, " டீ வசந்தி, மேலே அர்ஜெண்ட் வொர்க் இருக்கு நான் போறேன். உன்னோட கெஸ்ட்டைப் பார்க்க ஓடி வந்தேன். நான் மேலே போறேன் " என்றாள்
" ஓடி வந்தேன்னு நீ சொன்னதும் எனக்கு டிவியில் வரும் ஒரு விளம்பரம் தான் ஞாபகத்துக்கு வருது . அந்த ஆட் ரொம்ப நல்ல இருக்குடி. PERK BAR ஆட் அது. லவர்ஸ் ரெண்டு பேர் பேசிக்கிறாங்க . அந்த கேர்ள், நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ல, அந்த பாய், அதை கற்பனை பண்ணிப் பார்க்கிறான். பேண்ட் வாசிக்கிறவங்க, சாஸ்திரிகள், கோமகுண்டம் எல்லாம் காரில் வர . இவங்க ரெண்டு பேர் மட்டும் கல்யாண ட்ரஸில் ஓடியே வர்றாங்க. கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அந்த ஆட் ரொம்ப நல்லா இருக்கு. மிஸ் பண்ணிடாமே பாருங்க . நம்ம பிரண்ட்ஸ் சர்கிளுக்கும் சொல்லுங்க " என்றாள் வசந்தி 
" நீ ஆபீஸ்க்கு எப்ப வர்றதா ஐடியா ? "
" இந்த கேர்ள்சை அவங்க வீட்டில் கொண்டு போய்  சேர்த்துட்டு உடனே கிளம்பி வந்துடுவேன். இங்கே வந்ததும் ஒரு நாள் ரெஸ்ட் . அப்புறம் வழக்கம் போல ஆபீஸ், ப்ராஜெக்ட் , வீடு, அவ்வளவுதான் "
" சென்னையைப் பத்தி குட்டீஸ் என்ன சொல்றாங்க ?" என்று ஹேமா கேட்க " ஒரு வாரமா அவங்களுக்கு நான் ராயல் ட்ரீட் கொடுத்தேன்   " 
என்றாள் வசந்தி 
" வசந்தி நீ கிரேட் கண்ணு. உன்னோட திங்கிங்க்ஸ் எப்பவுமே ரொம்பவும் வித்தியாசமா இருக்கு. நாங்களும் எவ்வளவோ விஷயங்களைப் பார்க்கிறோம். கேட்கிறோம் . ஆனால் எதையும் செய்து பார்க்கணும்னு தோணறதில்லே. எந்த ஒரு வசதியுமே இல்லாத ஒரு கிராமத்தை தேடிக் கண்டு பிடிச்சு  ......"
"ஏய், ஸ்டாப், ஸ்டாப் .. என்ன நீ சொல்றே ? எந்த ஒரு வசதியுமே இல்லாத ஒரு கிராமத்தை தேடிக் கண்டு பிடிக்கனும்கிற அவசியமே இல்லே. நம்ம சென்னையிலேயே அந்த வசதி இல்லே, இந்த வசதி இல்லேன்னு சாலை மறியல் நடத்தறதை தினமும் டீவி நியூஸ்லே பார்க்கிறோம்தானே ? " என்று ஹேமா கேட்க , " இந்தா , உனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்குனு சொன்னேதானே , பிறகு ஏன் நிற்கிறே? ஓடுடி " என்று துரத்தினாள் பிரியா  " ஏதோ சொல்ல வந்தியேடீ , சொல்லி முடிச்சுடுடீ  , அதைக் கேட்டுட்டே போறேன், இல்லாட்டி எனக்கு வேலை ஓடாது  " என்றாள் ஹேமா.
"கிராமத்திலிருந்து ரெண்டு குழந்தைகளை சென்னைக்கு  அழைச்சிட்டு வந்து அவங்களுக்கு  வேண்டிய வசதியை செய்து கொடுத்து, அவங்க சந்தோசத்தைப் பார்த்து நீ சந்தோசப் படறே. ரியலி யூ ..." என்று சொல்ல வந்த பிரியாவை ஹேமாவின் குரல் தடுத்து நிறுத்தியது 
" ஏய், குழந்தைங்க எப்படி பீல் பண்றாங்கன்னு அவங்ககிட்டே கேளுடீ"
"ஓகே... குட்டீஸ், நல்லா என்ஜாய் பண்ணுணீங்களா ?  சென்னையை விட்டுப் போறோமேன்னு பீல் பண்றீங்களா  " என்று ஹேமா கேட்க சிறுமிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்  
"கமான் பேபீஸ், என்ன தயக்கம்?உங்க மனசில் என்ன  நினைக்கிறீங்க ? எதுவானாலும் நீங்க ரெண்டு பேரும் தைரியமா சொல்லலாம்" என்று உற்சாகப் படுத்தினாள் வசந்தி 
" அக்கா, உங்களையெல்லாம் பார்க்கப் பாவமா இருக்கு அக்கா " என்ற குரல் கோரஸாகவெளிப் பட்டது  
" ஏனம்மா? "
" பிறகு என்னக்கா, வீட்டில் கூட ஒருத்தங்க முகத்த ஒருத்தங்க பார்த்துப் பேச முடியாத படிக்கு ஒரே ஓட்டமும் நடையுமா இருக்கீக. காத்தைக் காசு குடுத்து வாங்குதீக. குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து வாங்குதீக. ஒரு வாரத்துக்கு சேர்த்து  காய் வாங்கி அதை ஐஸ் பெட்டியில் வைக்கீக. மறுநா எடுத்துப் பார்க்கிறப்போ அது விரைச்சுபோய் நிக்குது. ரெண்டு மூணு நேரத்துக்கு சேர்த்து சமையலைப்  பண்ணி ஐஸ் பெட்டிக்குள்ளே வைக்கீக. காய்ஞ்சு போன ரொட்டித் துண்டை எங்க ஊரில் நாய்க்கும் காக்கைக்கும் தூக்கிப் போடுவோம். அந்த ரொட்டித் துண்டை  ஓட்டல்லே போய் ரசிச்சு வேறு சாப்பிடுதீக. ஒரு வாளித் தண்ணிய மொண்டு மொண்டு குளிக்கீக. அக்கா , நீங்க எல்லாரும் எங்க ஊருக்கு ஒருவாட்டி வரணும்க்கா. மத்தியான சாப்பாட்டுக்கு நமக்கு வேணும்கிற காய்கறி யை நாம அன்னன்னிக்கு தோட்டத்துக்குப் போய் வாங்கியாறலாம். பம்ப் செட்டில் போய்க் குளிக்கலாம். ஆத்தங்கரைக்குப் போய் முங்கிக் குளிக்கலாம். வேலை வெட்டிக்குப் போனவக பள்ளிக்கூடம் போனவக எல்லாருமே சாயங் காலம் வந்துடுவாங்க. வீட்டுத் திண்ணையிலோ இல்லாட்டி மரத்தடியிலோ உட்கார்ந்து நாம ஊர்க் கதை பேசலாம். சினிமாப் பாட்டுப் படிக்கலாம்  விடுகதை போட்டு விளையாடலாம் பௌர்ணமி யன்னிக்கு நிலாவைப் பார்த்துகிட்டே கோரைப் பாயில் படுத்துத் தூங்கிறது எம்புட்டு நல்லா இருக்கும் தெரியுமா ? அக்கா உங்களுக்கெல்லாம் நம்ம வீட்டு வாசலைத் தேடி வர்ற  நிலாவைப் பார்க்கிறதுக்காவது நேரமிருக்கா? அக்கா நீங்க வசதியை அனுபவி க்கிறீங்க. இயற்கையான வாழ்க்கையை இழந்து நிக்கிறீங்க. நிரந்தரமா இல்லாட்டியும், ஒரு மாத்தத்துக்காகவாவது   நீங்க எங்கஎல்லாரும்  ஊருக்கு வரணும் . வந்து ஒரு வாரம் சந்தோசமா இருந்துட்டுப் போகணும் "என்று சொல்லிக் கொண்டே போக , தோழியர் மூவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்  

No comments:

Post a Comment