Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, February 09, 2013

திரைக் கவிஞர்கள் பார்வையில் " மனம் "

மனம் ஒரு குரங்கு - மனித
மனம் ஒரு குரங்கு = அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மை பாவத்தில் ஏற்றி விடும் - அது
பாசத்தில் தள்ளி விடும்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று ; மறந்து வாழ ஒன்று !


மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா 

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு 
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு  
முல்லைக் கொடியே முத்துச்சரமே  
கண்மூடி தூங்கம்மா 

ஆடாத மனமும் உண்டோ ; 
கலை அலங்காரமும் 
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ 


ஓ  மனமே கலங்காதே வீணாக மயங்காதே 
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் 


நீலத்திரை கடல் ஓடி வருவதில் நெஞ்சைப் பறிகொடுத்தேன் - இன்று 
கோடி அலைகள் என்  நெஞ்சில் எழுவதை யாரிடம் போயுரைப்பேன் 


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
 உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது 
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்  

இதயம் என்பது ஒரு வீடு - அது 
இன்றும் அன்றும் அவள் வீடு -அது 
மாளிகையானதும் அவளாலே - பின் 
மண் மேடானதும் அவளாலே 

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை 
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை  
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் 
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்   


No comments:

Post a Comment