.
.
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில்
சுற்றம் என்பது மந்தையடி !
|
|
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும். இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும். இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா !
|
|
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
( என்ன நடந்தாலும் அதைப் பார்க்காததுபோல்
மௌனமாக இருப்பவர்களை என்னமாய் சாடுகிறார் ? )
|
|
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
வாழும் வாழ்வே மாயம்
|
|
எளியோரைத் தாழ்த்தி
வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா ?
|
|
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே - உன்
மனசைப் பார்த்துக்கோ நல்லபடி !
|
|
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனதுதானே உலகம்
அதனால்தானே உலகம் எங்கும் மூண்டு நிற்குது கலகம் !
|
|
எவ்வளவு இருந்தாலும்
எப்படித்தான் பார்த்தாலும் இவ்வளவுதான் ! |
|
பருவ சிலைகளின் அரங்கம்
|
|
அறிவில்லாமே படைச்சதைதான் மிருகமின்னு சொன்னோம் -அந்த மிருகமெல்லாம் நம்மைப் பார்த்து சிரிக்கிதென்ன செய்வோம்? உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே !
|
No comments:
Post a Comment