Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 29, 2012

தெரிந்து கொள்ளுங்கள் !!

நாவை அடக்க முடியாதவன் மனதை அடக்க முடியாது: மனதை அடக்க முடியாதவன் ஆசையை அடக்க முடியாது. ஆசையே எல்லா துன்பத்திற்கும் முதல் காரணம்.

எதை இழந்தாலும் தைரியத்தை, நம்பிக்கையை இழக்காதவரை உலகம் நமது கைகளுக்குள்தான்.

பேசும் முன் கேளுங்கள் ; எழுதும் முன் யோசியுங்கள் ; செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 

அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் ஆபத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

நாண் என்பது வில்லுக்கு வலிமை;  நாணயம் என்பது வாழ்வுக்கு வலிமை; நா நயம்  என்பது சொல்லுக்கு வலிமை ; நாணம் என்பது பெண்ணுக்கு வலிமை ;

எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ள இடத்தில் ஏமாற்றங்களுக்கு வேலை இல்லை.

நம்மைவிட வலிமை குறைந்தவனை எதிர்ப்பதற்குப் பெயரல்ல வீரம் ! நம்மை விட எல்லா வகையிலும் வலிமையுடையவனின் தப்பைத் தட்டிக் கேட்பதற்குப் பெயர்தான் வீரம்.

எதற்க்கெடுத்தாலும் நேரமில்லை என்று சொல்வது உழைப்பவர்களுக்கு  மட்டும் வேத வாக்கல்ல! சோம்பேறிகளின் ஸ்லோகமும் அதுதான் !!

மனிதர்களே இல்லாத இடத்தில் அரசனாய் இருப்பதைவிட நாலுவித  மக்களும் நிறைந்த இடத்தில் ஆண்டியாய் இருப்பது மேல் !

எந்த இடத்தில் இலவசப் பொருட்கள் அதிகம் வழங்கப் படுகிறதோ அங்கே ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .


No comments:

Post a Comment