Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 28, 2012

விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம் !

.




நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.






ஒவ்வொரு மனிதனும் விதைக்கிறான்.  ஒருவன் வாய்ச்சொற்களால் விதைக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.



எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த விதைகளுக்கு ஏற்ப அதை பயிராகவோ களையாகவோ திரும்பப் பெறுகிறார்கள். விதை விதைத்தவன் பயிரை அடைகிறான்.




எதைப் பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு ,எந்த செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.



செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு, அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே " வெற்றி " என்னும் நற்பயிரைப் பெறுகிறான்.


பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர். (பாழ் நிலத்தில் பயிரை எதிர்பார்க்க முடியுமா ?




நீங்கள் பல / சில ஆண்டுகளுக்கு முன்பு என்ன விதைத்தீர்களோ அதைத்தான் இன்று அறுவடை செய்கிறீர்கள்.




நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.




விளைநிலம் ஆரோக்கியமின்றி இருந்தால் வளரும் பயிர் பூஞ்சையாகத் தான் இருக்கும். 



அறுவடையில் காட்டுகின்ற ஆர்வத்தை விதை விதைப்பதிலும் நீர் பாய்ச்சி பாடுபடுவதிலும் காட்ட வேண்டும்.

.

No comments:

Post a Comment