Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 17, 2011

நல்லதை சொல்லுகிறேன்; இங்கு நடந்ததை சொல்லுகிறேன்; என்னை நம்பவும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ ? !


பணிவாக இரு !  நீ கர்வப்படும்படி உன்னிடம் என்ன இருக்கிறது ?


வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பித்து விடுகிறோம்.




வீழ்வது வெட்கமானதல்ல !  வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம் !



அடைபட்டிருக்கும் கதவுகளின் அருகில் நின்று அழுது புலம்பிக்கொண்டு திறக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை  கவனியாமல்  இருந்து விடாதே.



அடுத்தவனுடைய மெழுகுவர்த்தியை அணைக்கும் முயற்சியில் உன்னுடைய விரல்களை சுட்டுக் கொள்ளாதே!


எதுவுமே நேராததுபோல் நடந்து கொள்ளுங்கள் ; என்னதான் நடந்திருந்தாலும் சரி !




சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ? ! !




எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது.  நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !


முட்டாள்களோடு விவாதம் வேண்டாமே. பார்கிறவர்களுக்கு யார் முட்டாள் என்ற சந்தேகம் வந்து விடும். 




உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறதா ? அப்படியானால் அந்த விமரிசனம் மிக சரியானதுதான்.!.

No comments:

Post a Comment