நல்லதை சொல்லுகிறேன்; இங்கு நடந்ததை சொல்லுகிறேன்; என்னை நம்பவும் நம்பி அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ ? !
பணிவாக இரு ! நீ கர்வப்படும்படி உன்னிடம் என்ன இருக்கிறது ?
வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பித்து விடுகிறோம்.
வீழ்வது வெட்கமானதல்ல ! வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம் !
அடைபட்டிருக்கும் கதவுகளின் அருகில் நின்று அழுது புலம்பிக்கொண்டு திறக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை கவனியாமல் இருந்து விடாதே.
அடுத்தவனுடைய மெழுகுவர்த்தியை அணைக்கும் முயற்சியில் உன்னுடைய விரல்களை சுட்டுக் கொள்ளாதே!
எதுவுமே நேராததுபோல் நடந்து கொள்ளுங்கள் ; என்னதான் நடந்திருந்தாலும் சரி !
சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ? ! !
எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது. நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !
முட்டாள்களோடு விவாதம் வேண்டாமே. பார்கிறவர்களுக்கு யார் முட்டாள் என்ற சந்தேகம் வந்து விடும்.
உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறதா ? அப்படியானால் அந்த விமரிசனம் மிக சரியானதுதான்.!.
No comments:
Post a Comment