புதிர் எண் : 04
கொடுத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு ஊர்களின் பெயரை கட்டங்களுக்குள் பொருத்தி அதில் ஒளிந்திருக்கும் பழமொழியைக் கண்டுபிடியுங்கள். இவற்றுள் ஒன்று மட்டும் தமிழ்நாட்டில் இல்லை. ஒரிசாவில் உள்ளது.
மேலிருந்து கீழ்
1 ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படுவது (4)
2 அல்வா நகரம் (பெயர் சுருக்கம்) (3)
3 பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த ஊரின் பெயர் கடம்பூர் (4)
4 முத்துராமலிங்கத் தேவரால் இந்த ஊருக்கும் பெருமை (5)
5 ஒரிசா மாநிலத்தில் "சூரியன் கோவில்" உள்ள ஊர் (4)
6 மாம்பழத்திற்கு பெயர் பெற்ற ஊர் (3)
7 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ள ஊரின் பெயர் சுருக்கம் (2)
8 பட்டுப் புடவை என்றாலே நினைவுக்கு வருவது (6)
9 சிவகங்கை மாவட்டத்தில் முருகன் குடைவரை கோவில் உள்ள ஊர் (6)
10 ராஜராஜ சோழன் என்றாலே நினைவில் வரும் ஊர் (5)
11 இந்த ஊரின் பெயரை சொன்னாலே மகிழ்ச்சி அருவியாய் கொட்டும். (5)
12 தமிழகத்திலேயே மிகப் பெரிய மாட்டுச் சந்தை இங்கு உள்ளது (5)
13 கும்பகோணத்தின் பெயர் சுருக்கம் (5)
14 தென்காசி மாவட்டத்திலுள்ள இந்த ஊர் மதுரை நாயக்கர் காலத்தில் "பாளையம்" எனவும் ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன் என்றும் சொல்லப்பட்டது. (விடை காண மண்டையை ரொம்பவும் பரண்டாதீங்க) (4)
15 பட்டாசு என்றாலே நினைவுக்கு வரும் ஊர் (4)
16 மலைக்கோட்டை பிள்ளையார் இங்கு இருக்கிறார்.(4)
17 கோடைவாசஸ்தலம் ஊட்டி இந்த மாவட்டத்தில் உள்ளது (4)
கீழிருந்து மேல்
5 மருதமலை ஆண்டவன் இங்கு அருள்செய்கிறார் (2)
8 செட்டிநாடு சமையல் என்றாலே நினைவுக்கு வருவது (5)
9 இந்த ஊரில் உள்ள கோவிலில் மட்டுந்தான் பெருமாள் மேற்கு முகமாக காட்சி தருகிறார் (5)
18 திருவெள்ளியங்குடி மற்றும் (சென்னை) மயிலாப்பூருக்கு உள்ள வேறொரு சிறப்பு பெயர் (6)
19 சிறந்த சுற்றுலா ஸ்தலம். ஊரின் பெயரிலேயே தேன் இருக்கிறது (2)
20 மறைந்த முதலமைச்சரை மையமாக வைத்து தற்போது அதிகம் பேசப்படும் ஊர் (4)
இடமிருந்து வலம்
21 தமிழ் நாட்டின் தலைநகரம் (3)
No comments:
Post a Comment