Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, February 10, 2020

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (42)



"என்ன? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படியொரு ஆழ்ந்த சிந்தனை, பக்கத்தில் ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாமே ?"
"நேற்று டீவி நியூஸில் பிச்சை எடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் பற்றிய நியூஸ் பார்த்தேன். அதிலிருந்து மனசே சரி இல்லை. படிச்சு பட்டம் வாங்கி உழைக்க தயாராக இருக்கிற இளைஞர் கூட்டம். ஆனால் வேலை கிடைக்காததால் வயிற்றுப் பிழைப்புக்கு பிச்சை எடுக்கிறார்களாம்"
"ஓ .. கடவுளே ...இந்த நியூஸை அரசியல்வாதிகள் பார்க்காமல் இருக்கணும் "
"ஏன்?.. பார்த்தால் என்ன?"
"எங்கள் நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட படித்து பட்டம் வாங்கி இருக்காங்கன்னு பெருமை பேசுவாங்க "
"ஹூம்.. யாரோ ஒரு வெள்ளைக்காரன் அந்தக்காலத்திலேயே மனிதர்களின் முதுமையை நினைத்துப் பார்த்து ஒரு ஊழியன் ரிட்டையர் மென்ட்டுக்குப் பிறகும் பசி பட்டினி இல்லாமல் இருக்கணும்னு நினைச்சுப் பார்த்து பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்ததால் நாம இன்னிக்கு வீட்டில் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடறோம். அது மட்டும் இல்லைனா நாமளும் இந்த பிச்சை எடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் மாதிரி எங்காவது ஒரு இடத்தில் கையேந்திக் கொண்டுதானே இருப்போம்."
"சரியாக சொன்னே.. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்குத்தான் தாக்குப் பிடிக்கும்னு சொல்லு வாங்க . அந்த மாதிரி பணி ஓய்வின் போது கையில் கிடைக்கிற பணம் எத்தனை நாளைக்கு வரும். அந்த பணத்தை நம்பித்தான் பிள்ளைகள் பொண்ணுங்க கல்யாண செலவை, படிப்பு செலவை கணக்குப் போட்டு வச்சிருப்பாங்க. அது கரைந்து விட்டால் பெரிசுங்க கதி அதோகதிதான்."
"..............."
"இதிலே இன்னொரு விஷயம் யோசிக்கணும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதியார் சொல்லி இருக்கிறார். தனியொருவனுக்காக ஜகத்தினை அழிக்க தயாராகும் மக்கள், தனக்கு இல்லைன்னா சும்மா இருப்பானா? ஒரு சாண் வயித்துக்காக எதையும் செய்வான். அதை நினைச்சாதான் கவலையா இருக்குது"
"நம்மாலே முடிஞ்சது அது ஒண்ணுதானே !"

No comments:

Post a Comment