Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, January 14, 2020

தைத் திங்கள் - 01

அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
                          பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !!

திருப்பாவை - 30 


வங்கக் கடல் கடைந்த மாதவனைக்  கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை
சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திருவெம்பாவை - 10


புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் 
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்
நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! 
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

No comments:

Post a Comment