ப்ளீஸ் டோன்ட் ஸ்மைல்
"ஒவ்வொருத்தனுக பண்ற பைத்தியக்காரத் தனத்துக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு.!" என்றான் வாசு.
"விவரம் சொல்லுப்பா. இப்படி மொட்டையா சொன்னா எப்படி?"
"நெட்டில் வெளியாகிற விஷயம் எல்லாமே ஊரறிந்த விஷயம்தான். ஊர் உலகம் அறிந்து கொள்ளணும்னுதான் அதை பதிவு செய்றாங்க. எனக்குத் தெரிந்த ஒரு அறிவு ஜீவி நெட்டில் படித்த விஷயம் ஒவ்வொண்ணையும் ஏதோ ராணுவ ரகசியத்தைக் கண்டுபிடிச்ச மாதிரி அதை பதிவு பண்றவங் களைத் தேடிக்கண்டுபிடிச்சு, தான் படிச்சதை சொல்லிக்கிட்டு திரியுது. காமெடியா இல்லே! அதைவிட ஜோக் யாரோட தளத்தை அது பார்க்கிறது ங்கிறது மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதாம். அதனாலே ஐ.பி. அட்ரெஸ் ஸை மறைச்சு வச்சிட்டு பார்க்கும் "
"விட்டுத் தள்ளு, வேலை வெட்டி இல்லாத கேஸ். எதையோ பண்ணட்டும். நான் ஒரு ஜோக் சொல்றேன் கேளு. அதுக்கு முன்னே ஒரு கேள்வி. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு எது?"
"படிக்கிற காலத்திலேயே இந்த மாதிரி கொஸ்டினை சாய்ஸில் அவாய்ட் பண்ணிடுவேன். இப்போ கேட்டால் எப்படி. பதிலை நீயே சொல்லு."
"தமிழ்நாடு!"
"என்ன சொல்றே ! இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு தமிழ் நாடா? இல்லாட்டா தமிழ் நாட்டில் இருக்குன்னு சொல்றியா ?"
"தமிழ் நாடு" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் விஜயகுமார்.
நண்பன் விழிப்பதைக் கண்டு, அதை மனதுக்குள் ரசித்தபடியே, " நண்பா, உபரி நீரை, தண்ணீரை சேமிக்கும் இடத்துக்குப் பேருதான் அணைக்கட்டு. கர்நாடகா மாநிலத்துக்கான அணைக்கட்டு தமிழ்நாடு. அங்கே வெள்ளம் வந்தால் உபரிநீர் எல்லாத்தையும் இங்கேதான் திசை திருப்பறாங்க."
"அட.. அப்படியாவது தண்ணி வந்தால் போதும்னு கையெடுத்துக் கும்பிடுவோமே."
"ஆமா.. கிழிச்சோம்.. அதை அப்படியே கடலில் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, தண்ணீரைத் தேடி அலைவோம்." என்று வேதனை தொனிக்கும் குரலில் சொன்னான் விஜயகுமார்..
"இது உனக்கு ஜோக்கா ?" என்று முறைத்தான் வாசு.
"இது உனக்கு ஜோக்கா ?" என்று முறைத்தான் வாசு.
No comments:
Post a Comment