Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 21, 2019

Meaningful Two Words in One Word Puzzles ( 21 - 25)

புதிர் எண் - 21

"வாருங்கள் மகா ஜனங்களே.. இன்னும் இரண்டு நாளில் போகிப்பண்டிகை. வீட்டில் உள்ள வேண்டாத பொருளை எல்லாரும் வாசலில் போட்டு கொளுத்துவாங்க. எங்கே பார்த்தாலும் கறுப்பு நிறத்தில் புகைதான். இதோ இந்த பவுடரை எரியும் நெருப்பில் தூவினால் "  - - - - - - - - - - " என்று பிளாட் ஃபார்ம் ஓரத்தில் நின்று ஒருவர் கூவிக் கொண்டிருக்க, "அது எப்படிடா?"    என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஷங்கர்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் காசு கொடுத்தால்   
- - - -   -   - - - - - " என்று அருகில் கரும்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தவரை சுட்டிக் காட்டினான் பாபு.

புதிர் எண் - 22

"சீஃப் கெஸ்ட் வயதானவராக இருக்கிறார். திறப்பு விழான்னு சொல்லி அவரை மாடிக்கு இழுத்தடிக்கிறாங்க. டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிட்டுது. ஒரு ரிமோட்டை அவரிடம் கொடுத்து இங்கிருந்தே திறந்து வைக்க சொல்லலாமே" என்று உண்மையான கவலையுடன் ஒருவர் கேட்டார்.
" - - - - - - - " விழுந்திடுவாரோன்னு வருத்தப்படறீங்களா? நீங்க இதுக்கு முன்னே இவரைப்பத்தி கேள்விப்பட்டதில்லே போலிருக்கு. அவர் உடலும் உள்ளமும் ரொம்பவும் ஸ்ட்ராங்.. எங்கும், எதிலும், எந்த சதியிலும், எந்த சூழ்நிலையிலும்   " - - -    - - - - " அவர். தெரிஞ்சுக்கோங்க." என்று பதில் வந்தது மற்றொருவரிடமிருந்து .

புதிர் எண் - 23

"மாணவர்களே, தனிமரம் என்றுமே தோப்பாகாது. அதே போல தனியொரு மனிதனால், தனியொரு கையால் எந்த மாற்றமும் நிகழ்த்தி விடமுடியாது.
" - -   - - -" இணைய வேண்டும். ஒன்றுபட்டால் மட்டுமே இந்த சமுதாயம் முன்னேறும் " என்று வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 
பியூன் வந்து அவரை அழைக்க, ஆசிரியர் வெளியேறினார். அந்த சமயம்  மாணவர்கள் ரொம்ப சீரியஸ் ஆக டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 
ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் "நாங்கள் அதை இன்றைக்கே ஆரம்பிச்சிடுவோம். அதை பார்த்து நாளைக்கு நீங்க அசந்து போயிடுவீங்க" என்று கோரஸாக சொன்னார்கள்.
மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியரிடம், அந்த அறையின் மூலையை சுட்டிக் காட்டினார்கள்.
"என்னடா.. இது கட்டிட வேலைக்கான மரச்சாமான்கள் ?" என்று ஆசிரியர் வியந்து போய்க் கேட்க, " நீங்கள்தானே  - - - - -" இணைய வேண்டும்னு சொன்னீங்க. பொருள் வந்தாச்சு. இணைக்க வேண்டியதுதான் பாக்கி " என்று மாணவர் தலைவன் சொல்ல, "எனக்கு தலைசுத்துது. போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா " என்று சொன்ன ஆசிரியர், அங்கேயே அமர்ந்து விட்டார். 


புதிர் எண் - 24


"டேய் .. எனக்கு சந்தைக்கு நேரமாச்சுடா.. நேரங்காலம் தெரியாமல் வம்பு பண்ணாதே. " - - - - " இல்லாமல் மாட்டு வண்டி ஓடாதுடா " என்று அப்பா கெஞ்சலான குரலில் கேட்க. "அப்படின்னா.. நான் கேட்டதை வாங்கிட்டு வருவீர்களா?" என்றான் சேது.
"சரி.."
"அதோ "- -   - - " குவியலுக்குள்" என்று அம்மா வறட்டி தட்டிக் கொண்டிருந்த இடத்தை சுட்டிக் காட்டினான் சேது. 

புதிர் எண் - 25

"அந்த சாமியாரைப் பார்க்க தினமும் இவ்வளவு கும்பல் வருகிறதே. அவர் சொல்றது நடக்குமா?" 
"ஓ .. இரண்டு வருஷம் முன்பு என்னோட பிறந்த நாளுக்கு ஆசீர்வாதம் வாங்கப் போனேன். "நீ "- - - - - " ஆக வாழ்வாய்"னு வாழ்த்தினார். நான் இப்போ "- - -   - - " ஆக இருக்கிறேன். திருப்பதியில் பக்தர்களின் முடிவெட்டும் வேலை பார்க்கிறேன்.

No comments:

Post a Comment