Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 15, 2019

Meaningful Two Words in One Word Puzzles ( 16 - 20 )

புதிர் எண் 16


வெறித்தனமாக அந்த குரங்கு ஆடுவதை வைத்த கண் வாங்காமல் அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என் ஆயுளில் ஒரு குரங்கு இந்த ஆட்டம் போட்டு நான் பார்த்ததே இல்லை." என்று பலரும் சொன்னார்கள்.
"பேய் பிடிச்ச மாதிரி ஆடுதே இந்த குரங்கு. ஒருவேளை அந்த குரங்காட்டி  இந்த குரங்குக்கு ஏதாவது   - - - - -  போட்டிருப்பானோ ?"
"ஊஹூம் இருக்காது. குரங்காட்டி தோளில் கிடக்கிற பையில் என்ன இருக்குதுனு பார்த்தியா. அந்த  - - -   - - போட்டுட்டு ஆடுது "

புதிர் எண் 17

நேரம் போவது தெரியாமல், ஃபேன்சி ஸ்டோரில் ஒவ்வொரு ஐயிட்டமாக ராதா தேடிக் கொண்டிருக்க, "வா .. ராது .. நேரம் போகுது .. சீக்கிரம் ஆகட்டும்" என்று அவசரப் படுத்தினாள், வானம் இருட்டிக் கொண்டிருப்பதை பார்த்த அம்மா, " மழை வரும் போல இருக்குது. -   - -   - - - -  "என்றாள் 
"அம்மா சும்மா தொணதொணக்காதே. மழை வரலாம்.  இல்லாட்டா 
 - - -  - - - - .  நீ என்னை நிம்மதியா பர்சேஸ் பண்ண விடு"

புதிர் எண் 18

"ஹாய் குமார்.. என்னோட கஸினுக்கு கல்யாணம். ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும்   உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் " - - -  " க்கு போறோம். நீயும் வர்றியா ? ஜாலியா என்ஜாய் பண்ணலாம்".
"இல்லே.. ஃபேமிலியில் சில பிரச்னை .. அதை சால்வ் பண்ண  நான் இங்கே இருந்தே ஆகணும். உன்னோடு சேர்ந்து வர எனக்கு "- -  -" ஸாரி .    

புதிர் எண் 19

"ஹாய் குருசரண், உன்னோட அண்ணன் ரெண்டு நாளா பார்க் பக்கமே வரக் காணும். என்ன மேட்டர்?"
"அப்பா, வடமாநில யாத்திரையில் இருக்கிறார். அதான் ஹோட்டலில் பில் பணத்தை வாங்க அண்ணன் " - - - - - " உட்கார்ந்திருக்கிறார்."
"ஓஹோ..அது என்ன ! உன் கையில் வில்லும் அம்பும்.. இந்த வித்தையை யார்கிட்டே கத்துக்கிறே ?"
"யார்கிட்டேயும் இல்லேண்ணா .. சுய முயற்சிதான்.. இது நான் "  - - -   - - " வித்தை"
"அப்படின்னா சபாஷ்டா தம்பி". 

புதிர் எண் 20

இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த கலாவதி அங்கு தனியாக உட்கார்ந்திருந்த சிறுவனிடம்  "நீ கோமதி தம்பிதானே ? " என்று கேட்டாள்.
சிறிது யோசித்த சிறுவன் "ஆமாம்.. நான் கோமா அக்காவோட தம்பிதான் "
என்றான்.
"எங்கே உன்னோட அக்கா ?"
- -  - - - -  "  இருக்காங்க "
"என்னது? - - - - - -  " இருக்காங்களா ? என்னாச்சு அவங்களுக்கு ?" என்று கலாவதி பதறவும், "அய்யோ .. அய்யோ .. " என்றபடி  விழா மேடையை சுட்டிக் காட்டினான்.
"அப்பாடா" என்று பெருமூச்சு விட்டாள் கலாவதி  

No comments:

Post a Comment