சூரியன் - மழை : இந்த இரண்டில், பவர் ஃபுல் எதுன்னு கேட்டால், நாம் எல்லாருமே கொஞ்சமும் தயங்காமே சொல்ற பதில் : சூரியன்.
போன வாரத்திலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது தானே?
ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன். சிறு தூறல் விழவும், சாலையில் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் ஓரம் கட்டினார்கள். பாதசாரிகள், வியாபாரிகள், மற்றவர்கள், ஷெல்டர் தேடி ஓடினார்கள்.
அதைக்கண்ட ஆட்டோ ட்ரைவர், "மாசக்கணக்கா வெயில் சுட்டெரிச்சு கிட்டு இருக்குது. அதை பெரிசா நினைக்காமே "உஸ் உஸ்"னு சொல்லிக்கிட்டு ஜனங்க அவங்கவங்க வேலையைப் பார்க்க ஓடிட்டே இருந்தாங்க. இரண்டு தூறல் விழவும், ஜனங்க நாலு பக்கமும் சிதறி ஓடறாங்க " என்றார்.
அவர் சொல்வது சரி என்று பட்டதால், நானும் அதைப்பற்றி யோசித்தபடி இருந்தேன்.
சூரியன் - மழை : இந்த இரண்டில், பவர் ஃபுல் எதுன்னு மனசுக்குள் ஒரு பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்தது.
இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட்டது. மழை தூறிக் கொண்டுதான் இருந்தது.
வீட்டை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தேன்.
எனக்குள் ஒரு கேள்விஎழுந்தது. சுட்டெரிக்கிற வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியிடங்களுக்குப் போய் வந்திருக்கிறேன். இந்த ரெண்டு சொட்டு தண்ணீரைப் பார்த்து ஏன் ஓடுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
கிடைத்த பதில்: ஹாண்ட் பேக்கில் உள்ள பொருட்கள் நனைந்து விடக் கூடாது. dress நனைந்து விடக்கூடாது.
ஆக மொத்தம் சுட்டெரிக்கும் வெயிலைக்கண்டு அஞ்சாத மனித இனம், சிறு தூறலைக் கண்டு ஓடுகிறதென்றால் அது உடை / உடைமை மீதுள்ள அக்கறையால்தான் என்பது தெரிந்து விட்டது.
இதை அந்த ஆட்டோ ட்ரைவர் கிட்டே சொல்லணும்னு நினைக்கிறேன். ஆனால் அவர் முகம் நினைவில் இல்லை.
மனித மனம் ஒன்றுதான். அது ஒரு சமயம் ஒவ்வொரு ஜீவராசி, தாவரங்களும் உயிர் வாழ தண்ணீர் தேவை என்று போராடுகிறது. மற்றொரு சமயம் மழை வரும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது.
விந்தை உலகம்; வேடிக்கை மனிதர்கள் !
மனித மனம் ஒன்றுதான். அது ஒரு சமயம் ஒவ்வொரு ஜீவராசி, தாவரங்களும் உயிர் வாழ தண்ணீர் தேவை என்று போராடுகிறது. மற்றொரு சமயம் மழை வரும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறது.
விந்தை உலகம்; வேடிக்கை மனிதர்கள் !
No comments:
Post a Comment