"என்ன ஸார் .... என்ன பிரச்சினை ? ஒரே சோக மயமா இருக்கீங்க?"
"வெளியூர் போக வேண்டியிருக்குது !"
"போயிட்டு வரவேண்டியதுதானே ..."
"குடும்பத்தோடு போக வேண்டியிருக்குது "
"நல்ல விஷயம் ... ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க ..."
"வீட்டை விட்டுட்டுப் போக வேண்டி இருக்குது "
"ஆமா... விட்டுட்டுட்டுதான் போயாகணும் ...நாம என்ன ஆஞ்சநேயரா, போகிற இடத்துக்கெல்லாம் கையோட வீட்டைத் தூக்கிட்டுப் போக முடியுமா ?"
"அதான் கவலையா இருக்குது !"
"புரியும்படி சொல்லுங்க ஸார் "
"வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போறப்போ பக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் இன்பார்ம் பண்ணிட்டுப் போங்கன்னு அடிக்கடி விளம்பரம் பண்ணுவாங்க .. இப்ப அதை செய்யவும் பயமா இருக்குது. யார் யாருக்கு எங்கெங்கு நெட் வொர்க் இருக்குதுனு தெரியலையே. அதான் கவலையா இருக்குது !"
"ஸார் .. ஒரு சின்ன திருத்தம்.. கவலையா இருக்குனு சொல்லாதீங்க... பயமா இருக்குனு சொல்லுங்க!"
No comments:
Post a Comment