Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 13, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 29

                                         அச்சுப்பிச்சு   அப்புமணி!
அன்று  காலை அனைத்து     தினசரிப்   பத்திரிக்கைகளிலும் வெளிநாட்டு சிறுமி இந்திய மண்ணில் கடத்தப்பட்டார் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியிருந்தது. இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த அமெரிக்க பிரபல த்தின் பேத்தி நிவேதிதா காஷ்மீரில் கடத்தப்பட்டார்.அமெரிக்கா வாழ் இந்தியரான திரு.ராகுல் பானர்ஜி இந்திய அரசியலுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர். தொழில்வர்த்தகம் சார்பாக அவர் இந்தியா வந்த போது அவருடைய  பேத்தி நிவேதிதாவும் உடன் வந்திருந்தார், இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக. பானர்ஜி தொழில் தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் மும்முரமாக இருக்க, பேத்தி நிவேதிதா அவரது பாதுகாவலர்களோடு   இந்தியாவின் சில பகுதிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவர் மகாபலிபுரம் வந்து சென்றார்.அங்கிருந்து டெல்லி சென்றார். காஷ்மீரை அவர் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தபோது அவர் கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. மூன்று நாட்களுக்கு முன்பாகவே இவர் கடத்தப்பட்டிருக்கி றார்.  இந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டதன் பின்னணியோ  கடத்தலு க்கான காரணம் தெரியவில்லை என்ற செய்தி வெளியாகி இருந்தது. 
காலை பத்து மணி அளவில் சேகரைத் தேடி வந்த ராஜு, அப்புமணியைப் பார்த்ததும் "நீ இவனை இன்னும் டெஸ்பாட்ச் பண்ணலியா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கழுத்தறுப்பு கேஸை கூட வச்சிருக்கப் போறே?"னுகேட்டவன்,அப்புமணியிடம்,"சொல்லுங்கண்ணே சொல்லுங்க  .. நீங்க எந்தெந்த நாடு எல்லாம் சுத்திப் பார்த்தீங்க. இன்னும் எத்தனை நாட்டுக்குப் போய்  வரணும் . சொல்லுங்கண்ணே " என்றான்.
"ச்சே. என்னடா நீ. அவன் குழந்தைப் பையன்.  அவனிடம் போய் வம்பு வளர்த்துகிட்டு " என்று கடிந்து கொண்டான் சேகர்.
"குழந்தைப்பையனா? அவனைப் பார்த்தாலே எனக்குப் பத்திட்டு வருது ."
"அந்த அளவுக்கு அவன் அப்படி என்னடா பண்ணிட்டான்?"
"டேய் ... சமய சந்தர்ப்பம் தெரியாமே பேசறாண்டா .. எந்தக் காரணமுமே இல்லாமே யார் மேலேயாவது உனக்குப் பாசம் வர்ற மாதிரி எனக்கு யார் மேலேயாவது வெறுப்பு வரும்தானே. அது இவனைப் பார்க்கிறப்ப  எனக்கு வருதுடா"
"சரி ... கோபப்படாதே. இவனாலே நமக்குள்ளே சண்டை வேண்டாம். இவனை நான் தனம் வீட்டில் விட்டுடறேன். "
"அப்பாடா ... பொழச்சேன். 'உனக்கு விருப்பமில்லாட்டா நீ போ'ன்னு என்னைப் போக சொல்லிடுவியோன்னு நினைச்சேன்.ஆமா.உடன் பிறவா சகோதரன் எப்ப வர்றார் ."
"வந்துட்டார். தனம் வீட்டில் விட்டு வச்சிருக்கிறேன் "
"தனம் ஊரில் இல்லையேடா "
"அவ இல்லாட்டா என்ன. அவ வீடு அங்கேதானே இருக்கு "
"அவரை கவனிச்சுக்க யார் இருக்காங்க ?"
"அதுக்கு ஆளை ஏற்பாடு பண்ணிட்டேன்."
"பரவாயில்லே...வேலையெல்லாம் ரொம்ப ஜரூரா நடக்குது போலிருக்கு து  "
"ஆமாம்"
அப்போது வயதான முதியவர் ஒருவர், "இங்கே ராஜு .... சேகர்ங்கிறது யாரு  ?" என்று கேட்டபடி வந்தார் 
"வாங்க .. நாங்கதான் " என்றனர் இருவரும் ஒரே சமயத்தில் 
"ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "
"பேசலாமே "
"இங்கே ஒரு பொடியன் வேறே இருக்கிறானே "
"அவன் நம்ம ... எங்க பையன் தான் .. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க " என்றான் சேகர் 
அதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்த அவர், "அட ... அசடுகளா ! என்னை அடையாளம் தெரியலியா ?" என்று கேட்டபடி வேஷத்தைக் கலைக்க, " ஏய் .. ராஸ்கல் நீயா ? என்னடா இது வேஷம் ?" என்று கேட்க, "எல்லாம் காரணம் இல்லாமலா?" என்று சொன்ன பிரவீன், "வாங்க .. பீச் பக்கம் போய் பேசலாம்... " என்றான்.
சரி என்று இருவரும் சொல்ல எல்லோரும் பீச்சை நோக்கி நடக்க ஆரம்பி த்தார்கள்.
கடற்கரை மண்ணில் உட்கார்ந்து சுண்டல் முறுக்கு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
"அண்ணா .. நான் கொஞ்ச நேரம் அலையிலே விளையாடிட்டு வர்றேன் " என்று அப்புமணி கெஞ்சலாக சொல்ல, "மவராசனா போயிட்டு வாடா என் செல்லம் " என்றான் ராஜு வயதான பாட்டி போன்ற குரலில். அடுத்த நிமிடமே கடல் அலையை நோக்கி ஓடினான் அப்புமணி .  
"டேய் ... சஸ்பென்ஸ் போதும்டா ... நீயா சொல்லுவேனு நினைச்சு நாங்க எவ்வளவு நேரந்தான் அமைதியா வர்றது ?" என்று கடுப்புடன் கேட்டான் சேகர். 
"பொறுடா ... பொறுமை கடலினும் பெரிது ...கடல் பக்கத்திலே உட்கார்ந்து கிட்டு பொறுமை இல்லாமே தவிக்கிறே " என்று சிரித்துக் கொண்டே கேட்டான் பிரவீன் 
"ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும். சொல்லுடா "
"பாரின் சாக்லேட் ஒன்னு வரப் போகுது. இந்நேரம் அது தனம் வீட்டுக்கு  வந்திருக்கும் " என்றான் பிரவீன்.
"டேய் ... புதிர் போடாமே விஷயத்தை சொல்லு. இல்லாட்டா அடி வாங்கியே சாவே  "
"ஒரு சின்னப் பொண்ணைக் கடத்திட்டாங்கனு பேப்பர் நியூஸ் பார்த்திருப் பீங்கதானே?"
"இல்லேடா ... அந்த ஸ்டால் பக்கமே ஒரு வாரமா போகலே "
"படா தமாஷான விஷயம்டா. நம்ம சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தரோட பொண்ணு பேர் நிவேதிதா. அது ஸ்கூல் பசங்க கூட சேர்ந்து காஷ்மீர் போயிருக்குது. அந்த இடத்துக்கு அமெரிக்காலேருந்து வந்த ஒரு பொண் ணும் சுத்திப் பார்க்க வந்திருக்குது. மினிஸ்டர் பொண்ணுன்னு நினைச்சு இந்தப் பொண்ணைத் தூக்கிட்டாங்க. தூக்கிட்டு, மினிஸ்டர் கிட்டே " உன் பொண்ணு எங்க கஸ்டடிலே இருக்கிறா'னு  பேரம் பேச ஆரம்பிச்சிருக் காங்க. 'முட்டாள், அவ இப்போ என் பக்கத்திலேயேதான் இருக்கிறா'னு சொல்லி மினிஸ்டர் போனைக் கட் பண்ணிட்டார். பிறகுதான் தெரிஞ்சி ருக்குது ஆள் மாறிப் போன விஷயம். கடைசியில் பாரின் சாக்லேட் அங்கே இங்கேன்னு சுத்தி கடைசியிலே நம்ம கைக்கு வந்துட்டுது. தனம் வீட்டில் வச்சிடலாம் அதை " என்று சொன்னான்  பிரவீன் ரொம்ப கேஷுவலாக.
"அதை வச்சு நாம என்னடா பண்றது ?"
"நாம ஒன்னும் பண்ண வேண்டாம். தூக்கின பார்ட்டி, அந்தப் பொண்ணோட வீட்டில் பணம் டிமாண்ட் பண்ணும். பணம் அவங்க கைக்கு வந்ததும் நமக்கு ஒரு ஷேர் வரும். நம்ம பொறுப்பு அதை பத்திரமா வச்சி ருக்கிறதுதான்." என்று பிரவீன் சொல்ல மற்ற இருவரும் யோசனையில் இருந்தார்கள்.
------------------------------------------------- தொடரும் ------------------------------------------------- 

No comments:

Post a Comment