Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 31, 2015

குழந்தைகளுக்கான கதைப் பாடல் - 02

திருடாதே !!




ஊசி இதோ பாரம்மா உனக்குத் தானே கொண்டு வந்தேன்
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !

மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே 
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !

மாம்பழம்  இதோ பாரம்மா மகிழ்வாய் தின்பாய் என் தாயே 
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !

மெச்சினேன் என் தங்கமே  மெச்சினேன் என் ராஜாவே 
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !

சேலை  இதோ பாரம்மா சிறப்பாய் அணிந்து கொள்ளம்மா 
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !

மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே 
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !

ஆடு திருடப் போனேனம்மா அகப்பட்டுக் கொண்டேன் நானம்மா 
உனக்கடி ஐம்பது எனக்கடி நூறு 

ஊசி திருடும் வேளையில் நீ அந்தக் கையில் அடித்திருந்தால் 
இந்தப் பாடு வராதே - இந்தப் பாடு வராதே
தூக்கு மரம் பாரம்மா - கழுத்தில் கண்ணி அப்பப்பா 
சுருக்கை அவிழ்த்து விடப்பா - செத்துத் தொலைகிறேன் நானப்பா !1


No comments:

Post a Comment