Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 106

                    எதையும் சரிசமமா பங்கு வைக்க சட்டம் போடணும் ! 

" மம்மீ .. கேப்ஸ்க்கு ரிமைண்ட் பண்ணுங்க. இன்னும் வண்டி வரலே " என்று சாரு இரைய " ஸாரிடா . எனக்கிருந்த டென்சனில் நான் புக் பண்ணவே மறந்துட்டேன் " என்ற கோமளாவை எரித்து விடுவதுபோலப் பார்ததாள்  சாருலதா.
" என்னை முறைச்சு என்னடி புண்ணியம் ? ஒருத்தியாலே நாலு பேர் போடற  ட்டியூ னுக்கும் ஒரே நேரத்தில் ஸ்டெப் போட முடியுமா ? உங்க டாடியைப் பாரு, காலையிலேயே எழுத உட்கார்ந்தாச்சு. அவருக்கு வர்ற போனைக் கூட நான் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு ? "
" சரி டிபன் ரெடியா ? "
" இன்னும் சுசிலாவைக் காணோமே. உனக்கு நாழியாச்சுன்னா நான் நூடுல்ஸ்  பண்ணித் தரட்டுமா ? "
"ஐயோ மம்மீ  .. அப்புறம் எனக்கு சாப்பிடணும்கிற ஆசையே இல்லாமே போயிடும் "
 " அப்படின்னா  'உடுப்பி' க்கு போன் பண்ணி டிபன் ஆர்டர் பண்ணட்டுமா ? "
" என்னது ? இனிமே பண்ணப் போறியா ? மம்மீ ..வாட் ஹேப்பென்ட் டு யூ " என்று பொறுமையிழந்த சாருலதா அலறினாள். 
" கொஞ்சம் பொறுடீ .. இன்னிக்கு ஒரு நாள் அண்ணனோடு சேர்ந்து அவன் காரில் போயேன். உன் காலேஜைத் தாண்டி தானே அவன் ஆபீஸ் போகணும் "
" நோ .. என் கார் இருக்கும்போது நான் ஏன் அவன் காரில் போகணும். என் வண்டி மெக்கானிக் ஷாப்பில் இருந்து இன்னும் வரலே .. உன்னைக் கால் டாக்ஸி புக் பண்ண சொன்னது என்னோட தப்பு. நானே புக் பண்ணிக் கிறேன். நானே போகிற வழியில் டிபன் சாப்பிட்டுக்கறேன். நீ டீவீ முன்னாலே உட்கார்ந்து சீரியல் பாரு " என்று சொல்லிவிட்டு மொபைல் நம்பரை பிரஸ் பண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தாள் சாருலதா.
"மம்மீ "
" என்னப்பா ... உனக்கு என்ன வேணும் ? " 
" ஏசீ கூல் எப்பெக்ட் திடீர்னு லோ ஆயிடுச்சு ..   "
" டாடி ஸ்டடி ரூமில் உட்கார்ந்து ஏதோ எழுதிட்டு இருக்கிறார்.  அவர் ரூம் ப்ரீயா இருக்கு. அங்கே போய்  படுக்கிறது தானே  "
" நோ மம்மீ .. என் ரூமை விட்டுட்டு நான் ஏன் போகணும் ? "
" இப்போ என்னதான் பண்ணனும்கிறே ? "
" சம்மர் ஆரம்பிக்கு முன்னமே ஏசீ ப்ராப்ளம் ஆரம்பிச்சுட்டுது. இப்பவே வோல்டாஸ் ஸ்பிளிட் க்கு ஆர்டர் பண்ணுங்க  "
" ஏய் .. உன்னோட ரூம் ஏசீக்கு இன்னும் வாரண்டி பீரியட் இருக்குடா "
" உங்களாலே முடியாட்டா நான் பண்ணிக்கிறேன். லீவ் இட் " என்று சொல்லியபடி ரூமுக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்ட கோபுவை என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென்று தெரியாமல் கோமளா சோபாவில் வந்து சாய்ந்தாள்.
"என்னடி பண்றே கோமு ? " என்று கேட்டபடி பேப்பரும் கையுமாக ஸ்டடி ரூமை விட்டு வெளியில் வந்த ரங்கநாதன் கேட்க, "காணாமப் போன மலேசிய விமானம் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு விமானத்தைப் பத்திக் கவலைப் பட்டுட்டுருந்தேன். அதுக்குக் கூட டைம் கொடுக்காமே உங்க " செல்லங்கள் " கார் ரிப்பேர், ஏசீ  ரிப்பேர்ன்னு ஏகப் பட்ட கம்ப்ளைன்ட் .. என்ன ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க. விமானம் கடத்தல்னு முதலில் ஒரு நியூஸ் வந்ததும்  "அப்பாடா . ப்ளைட் கடலுக்குள் விழலே. யாருக் கும் எதுவும் ஆகலே. எல்லாரும் உயிரோடுதான் இருப்பாங்க. அந்த விமானத்தைக் கடத்தினவங்களோட   "பேச்சு வார்த்தை " நடத்தினதும் இவங்களை பத்திரமா விட்டுடுவாங்கனு நம்பி இருந்தேன் . இப்போ அதுவும் இல்லேன்னு சொல்றாங்களே. நிஜமாகவே கடலுக்குள் விழுந்தி ருந்தால்  அத்தனை ஜீவன்களும் ஒவ்வொரு நொடியும்  எப்படி எப்படி யெல்லாம் துடிச்சிருக்கும்னு   கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலே ? " என்றாள் கோமளா நெகிழ்ந்த குரலில்.
"அட ..நான் கூட அதைப் பத்திதான் ஒரு ஆர்டிகிள் எழுத நினைச்சி ருந்தேன். "தேவை  சிக்கனம் " என்ற தலைப்பில் ஒரு ஆர்டிகிள் வேணும்னு வாசுபோன் பண்ணினார்.  அதான் பெட்ரோல் சிக்கனம் பற்றி  மின்சாரத்தை எப்படி சிக்கனமாக உபயோகப் படுத்தலாம் என்பது பற்றி  எழுத உட்கார்ந்தேன்.. நான் எழுதியிருக்கிற பாயிண்ட்சை படிக்கிறேன். உனக்கு ஏதாவது தோணினா சொல்லு சேர்த்துக்கலாம்..   வீடு, சினிமா, தியேட்டர், ஹோட்டல் இந்த மாதிரி இடங்களிலெல்லாம் ஏசீ உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளணும். மின்சாரம் இல்லாத ஒரே ஒரு காரணத்தால் தொழில், விவசாயம் எல்லாம் பாதிக்கப் பட்டு வேலையிழப்பு பட்டினி என்கிற நிலைமை வருவதைக் காட்டிலும் , காற்று ஏசீ இல்லாமல் நம்மால் வாழ முடியும்கிற அளவுக்கு நம்மை பக்குவப் படுத்திக்கணும் ..... "
"ஸ்டாப் ... ஸ்டாப் ... ஏசீ இல்லாட்டா உயிரே போயிடும்னு நினைக்கிற ஜனங்க இருக்கிற நாடு . அதனாலே ஒரு வீட்டில் நாலு பேர் இருந்தால், நாலு பேரும் ஒரே பானின்  கீழோ, ஒரே ஏசீ ரூமிலோ படுக்கப் பழக்கப் படுத்திக் கொண்டால்  நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லதுன்னு எழுதிக்கோங்க.. ஒரே வீட்டில் நாலு கார் இருந்தாலும், நாட்டுக்கு நல்லது செய்றதாக நினைத்து  ஒரே காரில் போய்வர பழகிக்கணும் . சிக்கனத்தை கடைப் பிடிக்கணும்ன்னு எழுதுங்க . நம்ம வீட்டில் இதை யாரும் கேட்க மாட்டாங்க. நாட்டின் மூலை முடுக்கில் இருக்கிற  ஏதாவது நல்ல உள்ளங்களாவது கேட்கட்டும்  " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழும்பிப் போன கோமளாவை  " இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு ? " என்ற கேள்விக் குறியுடன் பார்த்தார்  ரங்கநாதன் . 

No comments:

Post a Comment